|
|||||
உலக சுங்க தினம் - ஜனவரி 26 |
|||||
நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படுவதால் கடத்தல் காரர்களின் வன்முறைக்கு பலியாகும் சுங்க அதிகாரிகளை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி சர்வதேச சுங்க தினம் கடைபிடிக்கப் படுகிறது. உலக சுங்க அமைப்பின் ( World Customs Organization ) முதல் கூட்டம் 1953 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி புருசெல்ஸ் நகரில் நடந்தது. அந்தத் தினமே சர்வதேச சுங்க தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலகில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் குறுகிய காலத்தில் பெரும் பணக்காரராக வேண்டும் என துடியாய் துடிக்கிறார்கள். இதற்காக சிலர் நல்ல வழிகளையும், பலர் தீய வழிகளையும் தேர்ந்தெடுக்கின்றனர். சட்ட விரோதமாக போதைப் பொருட்களை கடத்தி விற்பது மூலம் அவர்களிடம் சர்வ சாதாரணமாக லட்சங்கள் ஏன் கோடிகள் கூட நடமாடுகிறது. அதே நேரத்தில், போதை பொருள் கடத்தல் வழக்கில் அவர்கள் சிக்கினால், அவர்களின் வெளி உலக வாழ்க்கை அதனுடன் முடிந்துவிடுகிறது. போதைப் பொருள்கள் கடத்தலை கணிசமாக குறைக்கும் விழிப்புணர்வு நோக்கத்தோடுதான் சர்வதேச சுங்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தலில் போது சுங்க அதிகாரிகளிடம் மாட்டாமல் தப்பிக்க கடத்தல்காரர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அப்போது அதிகாரிகள் பலர் மரணம் அடைகிறார்கள். இவ்விதமாக இறந்த ராணுவ வீரர்கள், சுங்க அதிகாரிகள், பாதுகாப்பு வீரர்களை நினைவுக் கூர்ந்து குடும்பத்தினருக்கு நிதி உதவி இந்தச் சுங்க தினத்தின் போது அளிக்கப்படுகிறது. மேலும், சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கும் விருது கொடுக்கப்படுகிறது. சுங்க அதிகாரிகள் எப்படி போதைப் பொருட்களை கண்டு பிடிக்கிறார்கள் என்று பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, மோப்ப நாய்களை கொண்டு சாகச நிகழ்ச்சிகளும் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படுவதால் கடத்தல் காரர்களின் வன்முறைக்கு பலியாகும் சுங்க அதிகாரிகளை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி சர்வதேச சுங்க தினம் கடைபிடிக்கப் படுகிறது. உலக சுங்க அமைப்பின் ( World Customs Organization ) முதல் கூட்டம் 1953 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி புருசெல்ஸ் நகரில் நடந்தது. அந்தத் தினமே சர்வதேச சுங்க தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலகில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் குறுகிய காலத்தில் பெரும் பணக்காரராக வேண்டும் என துடியாய் துடிக்கிறார்கள். இதற்காக சிலர் நல்ல வழிகளையும், பலர் தீய வழிகளையும் தேர்ந்தெடுக்கின்றனர். சட்ட விரோதமாக போதைப் பொருட்களை கடத்தி விற்பது மூலம் அவர்களிடம் சர்வ சாதாரணமாக லட்சங்கள் ஏன் கோடிகள் கூட நடமாடுகிறது. அதே நேரத்தில், போதை பொருள் கடத்தல் வழக்கில் அவர்கள் சிக்கினால், அவர்களின் வெளி உலக வாழ்க்கை அதனுடன் முடிந்துவிடுகிறது. போதைப் பொருள்கள் கடத்தலை கணிசமாக குறைக்கும் விழிப்புணர்வு நோக்கத்தோடுதான் சர்வதேச சுங்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தலில் போது சுங்க அதிகாரிகளிடம் மாட்டாமல் தப்பிக்க கடத்தல்காரர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அப்போது அதிகாரிகள் பலர் மரணம் அடைகிறார்கள். இவ்விதமாக இறந்த ராணுவ வீரர்கள், சுங்க அதிகாரிகள், பாதுகாப்பு வீரர்களை நினைவுக் கூர்ந்து குடும்பத்தினருக்கு நிதி உதவி இந்தச் சுங்க தினத்தின் போது அளிக்கப்படுகிறது. மேலும், சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கும் விருது கொடுக்கப்படுகிறது. சுங்க அதிகாரிகள் எப்படி போதைப் பொருட்களை கண்டு பிடிக்கிறார்கள் என்று பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, மோப்ப நாய்களை கொண்டு சாகச நிகழ்ச்சிகளும் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
|
|||||
by Swathi on 02 Jan 2014 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|