|
|||||
சர்வதேச அளவில் தமிழை அங்கீகரிக்கும் தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறை: சென்னையில் நடந்தது! |
|||||
சர்வதேச அளவில் தமிழை கணினி வழி அங்கீகரிக்கும் தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறை சென்னையில் நடந்தது. இணையத்தில் தமிழ் மொழி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதிலுள்ள பிரச்சினை என்னவெனில் குறிப்பிட்ட எழுத்துருக்களைத் தவிர மற்ற எழுத்துருக்கள் (FONTS) பொதுவானதாக இல்லாததால், தமிழில் அனுப்பும் மின்னஞ்சல் பெறுபவர்கள் அதனைப் படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதேபோலவே, தமிழில் உருவாக்கப்படும் மின்னஞ்சல் முகவரிகள் தற்போதைய நிலையில் உலக அளவில் பயன்படுத்தும் நிலையில் இல்லை. இதனால் வேறு வழியின்றி அனைத்து மின்னஞ்சல் முகவரிகளையும் ஆங்கிலத்திலேயே பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் டேட்டா எக்ஸ்ஜென் என்ற அமெரிக்க நிறுவனம், புதிய இணைய மென்பொருள் தொழில்நுட்பம் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இது குறித்து அறிமுகப்படுத்தும் பயிற்சிப் பட்டறை சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. ஐஏஎம்ஏஐ ( IAMAI - Internet and mobile association of India) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தப் பயிற்சி பட்டறையில், இத்துறை சார்ந்த நிபுணர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இது குறித்து, டேட்டா எக்ஸ் ஜென் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ஆஷிஷ் மோடி கூறியதாவது: "ஐடிஎன் (IDN - Internationalised Domain names) எனும் இப்புதிய தொழில்நுட்பத்தை நாங்கள் இன்னும் மூன்று மாதத்தில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். இது குறித்து தான் தற்போது மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ், கன்னடம், இந்தி உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய அலுவல் மொழிகளில் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளோம். இதன்மூலமாக ஒருவர் நமது தாய்மொழியில் உலகத்தின் எந்த மூலைக்கும் தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும். மேலும், பொதுவான எழுத்துரு என்பதால் அந்த மொழியில் எழுதப்பட்ட விவரங்களைத் தடையில்லாமல் படிக்க முடியும்" இவ்வாறு அவர் கூறினார். |
|||||
by Mani Bharathi on 13 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|