LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இரும்பு குதிரை படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!

இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் இரும்பு குதிரை. இப்படத்தை ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரித்துள்ளது. யுவராஜ் போஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

 

இதில்  ஜானி , ராய் லட்சுமி, ப்ரியாஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடந்தது.

 

அப்போது இப்படத்தின் கதாநாயகன் அதர்வா பேசுகையில், பரதேசி படத்திற்கு பிறகு வித்தியாசமான கதைகளாக நான் தேடிக்கொண்டிருந்தபோது, இந்த படத்தை இயக்கியுள்ள யுவராஜ்போஸ் என்னை சந்தித்து கதை சொன்னார். ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அதனால் எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கால்சீட் கொடுத்தேன். அவரும் கதை சொன்னது போன்றே படமாக்கியுள்ளார்.

 

அதனால் கண்டிப்பாக இரும்பு குதிரை வெற்றி பெறுவதோடு, ஒரு இண்டர்நேஷனல் ஸ்டைல் படமாகவும் இருக்கும். அதனால் முழுநம்பிக்கையுடன் நடிக்கத் தொடங்கினேன். மேலும், இந்த படம் பைக் ரேஸை மையப்படுத்தி உருவாக்கப்பட்டபோதும் பைக்கில் செல்பவர்கள் நிதானமில்லாமல் பைக்கை ஓட்டக்கூடாது என்கிற தனி மனித ஒழுக்கத்தையும் சொல்லும் படமாக இருக்கும். ஒரு சிக்னல் ஜம்பிங்கில் விபத்து நடக்கிறது. அந்த விபத்துக்கு முன்பு, பின்பு நடக்கிற விசயங்களாக கதை நகர்கிறது.


அதோடு, இந்த படத்தில் நடிப்பதற்கு முன்புவரை 4 கியர் பைக்தான் ஓட்டியிருந்தேன். இந்த படத்துக்காக 8 கியர் பைக் ஓட்டி பயிற்சி எடுத்தேன். படப்பிடிப்பு தளத்துக்கு சென்று 5 நாட்களுக்கு பிறகுதான் அந்த பைக்கை ஓட்டினேன்.

 

அந்த ரேஸ் பைக் 5 கியரில் சென்றாலே 180ல் செல்லும் என்று தனது பிரமிப்பை சொல்லும் அதர்வா, இந்த படம் பைக் சூதாட்டத்தை மையமாகக்கொண்டு உருவாகவில்லை. நேர்மையான விளையாட்டு சம்பந்தப்பட்ட, எல்லா விதிகளையும் பின்பற்றும் படமாக உருவாகியிருப்பதாக இருக்கிறது என்றார் அதர்வா.

இரும்புக்குதிரை படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் இரும்புக்குதிரை. இப்படத்தை ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரித்துள்ளது. யுவராஜ் போஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இதில்  ஜானி , ராய் லட்சுமி, ப்ரியாஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடந்தது. அப்போது இப்படத்தின் கதாநாயகன் அதர்வா பேசுகையில், பரதேசி படத்திற்கு பிறகு வித்தியாசமான கதைகளாக நான் தேடிக்கொண்டிருந்தபோது, இந்த படத்தை இயக்கியுள்ள யுவராஜ்போஸ் என்னை சந்தித்து கதை சொன்னார். ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அதனால் எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கால்சீட் கொடுத்தேன். அவரும் கதை சொன்னது போன்றே படமாக்கியுள்ளார். அதனால் கண்டிப்பாக இருமபுக்குதிரை வெற்றி பெறுவதோடு, ஒரு இண்டர்நேஷனல் ஸ்டைல் படமாகவும் இருக்கும். அதனால் முழுநம்பிக்கையுடன் நடிக்கத் தொடங்கினேன்.
மேலும், இந்த படம் பைக் ரேஸை மையப்படுத்தி உருவாக்கப்பட்டபோதும் பைக்கில் செல்பவர்கள் நிதானமில்லாமல் பைக்கை ஓடடக்கூடாது என்கிற தனி மனித ஒழுக்கத்தையும் சொல்லும் படமாக இருக்கும். ஒரு சிக்னல் ஜம்பிங்கில் விபத்து நடக்கிறது. அந்த விபத்துக்கு முன்பு, பின்பு நடக்கிற விசயங்களாக கதை நகர்கிறது.
அதோடு, இந்த படத்தில் நடிப்பதற்கு முன்புவரை 4 கியர் பைக்தான் ஓட்டியிருந்தேன். இந்த படத்துக்காக 8 கியர் பைக் ஓட்டி பயிற்சி எடுத்தேன். படப்பிடிப்பு தளத்துக்கு சென்று 5 நாட்களுக்கு பிறகுதான் அந்த பைக்கை ஓட்டினேன். அந்த ரேஸ் பைக் 5 கியரில் சென்றாலே 180ல் செல்லும் என்று தனது பிரமிப்பை சொல்லும் அதர்வா, இந்த படம் பைக் சூதாட்டத்தை மையமாகக்கொண்டு உருவாகவில்லை. நேர்மையான விளையாட்டு சம்பந்தப்பட்ட, எல்லா விதிகளையும் பின்பற்றும் படமாக உருவாகியிருப்பதாக இருக்கிறது என்றார் அதர்வா.
by Swathi   on 07 Aug 2014  0 Comments
Tags: Irumbu Kuthirai Atharva   Irumbu Kuthirai Special   இரும்பு குதிரை              
 தொடர்புடையவை-Related Articles
இரும்பு குதிரை படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !! இரும்பு குதிரை படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
ஆகஸ்டில் வெளியாகும் இரும்பு குதிரை !! ஆகஸ்டில் வெளியாகும் இரும்பு குதிரை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.