சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். மும்பை போலீசார் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் உள்ள தொடர்பு குறித்து சுமார் இரண்டரை மணி நேரம் குருநாத் மெய்யப்பனிடம் விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்தனர்.
குருநாத் மெய்யப்பனிடம் விசாரணையை தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராய், சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் பாலிவுட் நடிகர் விண்டூ தாரா சிங்குடன் குருநாத் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், இந்த விவகாரத்தில் விண்டூவுக்கு குருநாத் மெய்யப்பன் ஆலோசனைகளை வழங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதை அடுத்து இன்று அவர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். எனினும், அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. அவர் மீது சூதாட்டம், கூட்டுச்சதி, மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
|