|
||||||||
இப்படிக்குத் தமிழ் |
||||||||
இப்படிக்குத் தமிழ் அன்புள்ள தமிழர்களே!!! இதை நீங்கள் படிக்கும்போது, நான் உங்களை விட்டு வெகு தூரம் சென்று கொண்டிருப்பேன்! என் வேண்டுகோள்கள் சிலவற்றையாவது கேளுங்கள்! தமிழில் திரைப்படம் எடுங்கள் , உலகின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு இயக்குனர் உருவாகிவிட்ட போதிலும்!! தக்காளி என்றே அழையுங்கள், வணிக வளாகத்தின் கண்ணாடிக்கூண்டில் தங்க நகைகளாக அவை மின்னிடும்போதிலும்!! நம் மொழியில் செய்திகளை பாருங்கள், பாண்டி பஜாரின் தெருவோரத்தில் கூறு நூறு ரூபாய் என்று ஐபோன்கள் விற்கப்படும்போதிலும்!! அன்பளிப்பு என்றே போடுங்கள், செவ்வாய் கிரக வாசியாகிவிட்ட அண்ணன் மகன் வீட்டிற்கு விருந்தினராக செல்லுகையில், அன்பளிப்பாக காற்றடைத்த சிலிண்டர் ஒன்றை கொடுக்கும்போதிலும்!!. உபயம் என்றே எழுதுங்கள், இரவோடு இரவாக நிலவைக் கைப்பற்றி, அதில் ஓர் கோட்டையைக் கட்டி , கோட்டைக்கு நன்கொடையாக தரும் சுவர்க் கடிகாரத்திலும்!! இவற்றால் என்னை பரிதாபத்திற்குரியவனாக பார்ப்பவன் முட்டாள் இனத்தவன் !! கடைசி தமிழனின் மூச்சொழிந்து அழிந்துவிட நேர்ந்தாலும் நான் எங்கோ வாழ்ந்துகொண்டே இருப்பேன்!! நன்றி !!! வருகிறேன் ! - துங்கபுரம் K சிவசங்கர். |
||||||||
by Sivasankar on 14 Apr 2014 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|