LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

இறைவணக்கம்

 

இறை என்பது தெய்வநிலையைக் குறிக்கும் ஒரு சிறப்புச் சொல்
தெய்வம் என்பது அரூபமான பேராதாலச் சக்தி. மாபெரும் பேரியக்க
மண்டல நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் மூலமானதும் புலண்களைக்
கொண்டு வேகம், காலம், பருமன், தூரம் என்ற நான்கு அளவைகளாலும்
கணிக்க முடியாததும் அறிவு புலண்களின் மூலமாகத் தேடும்போது 
இல்லையென்றும் தனது ஆறாவது நிலையின் உயர்விலே ஆராயும்போது
உண்டு என்றும் உணரக்கூடியதுமான உண்மைநிலை எதுவோ அதுவே
தெய்வம் என்று வழங்கப்படுகிறது.
வாழ்வு சிறப்படைய, வளம் பெற்று ஓங்க, உடலுக்கும் உள்ளத்திற்கும்
ஒரு நற்பயிற்சியே இறைவணக்கம். வயதிற்கும் அறிவு நிலைக்கும் ஒத்த
முறையில் இறைவணக்கம் தேர்ந்து நடத்தி வரவேண்டும். உடல்நலம்,
பொருள் வளமும் அறிவு இனிமையும் கெடாதவாறு சிக்கனமான முறையில்
இறைவனக்கம் அமையவேண்டும். உடல்நலமும் மனவளமும் பெறுவதற்கு
மனிதன் தன்னைப் பயிற்றுவித்துக் கொள்வதற்கே, தன்னை மேலும் மேலும்
உயர்த்திக் கொள்வதற்கே, இறைவணக்கம் உதவுகிறது என்பதை நன்கறிந்து
நினைவில் கொள்ளவேண்டும்.
இன்ப துன்ப உணர்ச்சிகளுக்கு அப்பால் நிற்கும் பரம்பொருளை மகிழ்விக்க
வேண்டுமென்று நினைப்பது அறயாமை. இறைவணக்கம் முடிந்த உடன் 
வாழ்விற்கு வளமளிக்கும் சங்கற்பங்களை ஓதுவது சிறந்த பயனளிக்கும் முறை. உடல்நலம், அறிவு, செல்வம், ஒழுக்கம், அறம், கடமை, கீர்த்தி இவற்றில் மேன்மேலும் சிறப்படைவேன் என்று பலமுறை தானே உறுதி
கூறிக்கொள்வது மனிதன் வாழ்வைச் சிறப்பிக்க ஏற்ற உயர்ந்த பயிற்சி.
இறைவணக்கத்தின் மூலம் முழுப்பயன் பெறவேண்டுமெனில் மனிதன்
தன் சினம், கவலை, என்ற இருவித மனோஎழுச்சிகளையும் படிப்படியாக
குறைத்துப் பின் அடியுடன் போக்கிக் கொள்ளவேண்டும். ஆகவே இறைவணக்கத்தில், இயற்கைத் தத்துவ விளக்கத்தில் வாழ்வின் அனுபவத்தில் சிறந்த அறிஞரைத் துணைகொண்டு, இறைவணக்கம் தேர்ந்து
பயின்று ஒழுகி மேன்மையடையுங்கள்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

இறை என்பது தெய்வநிலையைக் குறிக்கும் ஒரு சிறப்புச் சொல்

தெய்வம் என்பது அரூபமான பேராதாலச் சக்தி. மாபெரும் பேரியக்க

மண்டல நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் மூலமானதும் புலண்களைக்

கொண்டு வேகம், காலம், பருமன், தூரம் என்ற நான்கு அளவைகளாலும்

கணிக்க முடியாததும் அறிவு புலண்களின் மூலமாகத் தேடும்போது 

இல்லையென்றும் தனது ஆறாவது நிலையின் உயர்விலே ஆராயும்போது

உண்டு என்றும் உணரக்கூடியதுமான உண்மைநிலை எதுவோ அதுவே

தெய்வம் என்று வழங்கப்படுகிறது.

 

வாழ்வு சிறப்படைய, வளம் பெற்று ஓங்க, உடலுக்கும் உள்ளத்திற்கும்

ஒரு நற்பயிற்சியே இறைவணக்கம். வயதிற்கும் அறிவு நிலைக்கும் ஒத்த

முறையில் இறைவணக்கம் தேர்ந்து நடத்தி வரவேண்டும். உடல்நலம்,

பொருள் வளமும் அறிவு இனிமையும் கெடாதவாறு சிக்கனமான முறையில்

இறைவனக்கம் அமையவேண்டும். உடல்நலமும் மனவளமும் பெறுவதற்கு

மனிதன் தன்னைப் பயிற்றுவித்துக் கொள்வதற்கே, தன்னை மேலும் மேலும்

உயர்த்திக் கொள்வதற்கே, இறைவணக்கம் உதவுகிறது என்பதை நன்கறிந்து

நினைவில் கொள்ளவேண்டும்.

 

இன்ப துன்ப உணர்ச்சிகளுக்கு அப்பால் நிற்கும் பரம்பொருளை மகிழ்விக்க

வேண்டுமென்று நினைப்பது அறயாமை. இறைவணக்கம் முடிந்த உடன் 

வாழ்விற்கு வளமளிக்கும் சங்கற்பங்களை ஓதுவது சிறந்த பயனளிக்கும் முறை. உடல்நலம், அறிவு, செல்வம், ஒழுக்கம், அறம், கடமை, கீர்த்தி இவற்றில் மேன்மேலும் சிறப்படைவேன் என்று பலமுறை தானே உறுதி

கூறிக்கொள்வது மனிதன் வாழ்வைச் சிறப்பிக்க ஏற்ற உயர்ந்த பயிற்சி.

 

இறைவணக்கத்தின் மூலம் முழுப்பயன் பெறவேண்டுமெனில் மனிதன்

தன் சினம், கவலை, என்ற இருவித மனோஎழுச்சிகளையும் படிப்படியாக

குறைத்துப் பின் அடியுடன் போக்கிக் கொள்ளவேண்டும். ஆகவே இறைவணக்கத்தில், இயற்கைத் தத்துவ விளக்கத்தில் வாழ்வின் அனுபவத்தில் சிறந்த அறிஞரைத் துணைகொண்டு, இறைவணக்கம் தேர்ந்து

பயின்று ஒழுகி மேன்மையடையுங்கள்.

 

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

 

by Swathi   on 20 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.