LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

இறைவன் தந்த வரம்

வாசுகிக்குக் கதை என்றால் மிகவும் பிடிக்கும். திறந்த வாயை மூடாமல் கதை கேட்பாள். அம்மா மடியில் படுத்து கொண்டு  கதை கேட்டுக்கிடே தூங்கறதுண்ணா அவ்வளவு பிடிக்கும். அம்மா இல்லை என்றால் பாட்டியிடம் கதை  கேட்பாள்... ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று கதை கேட்க்கவில்லை என்றால்  வாசுகிக்குத் தூக்கமே வராது.

 

கதையில் வருபவர்களை போல் தன்னையும் கற்பனைப் பண்ணிப் பார்த்து கொள்வாள்.

 

அம்மாவும், பாட்டியும் சொலும் கதையில் வருபவர்கள் எல்லாம் எதுக்கோ ஒன்றுக்கு ஆசைப்படுவாங்க. அது கிடைப்பதற்காக தவம் செய்வாங்க. கடவுள் அவங்க முன்னாடி வந்து "பக்தா உனக்கு என்ன வேண்டும் கேள்" என்று சொல்லவாரு, அவங்களும் வரம் கேட்பாங்க. கடவுள் வரம் கொடுப்பாரு. அவங்க ஆசைப்பட்டது அவங்களுக்கு கிடைக்கும். அவங்க மகிழ்ச்சியாக இருப்பாங்க...

 

"ஐ.. நாமளும் அப்படி கடவுளிடம் கேட்டால் கடவுள் கொடுக்கவா மாட்டார்.. தவம் செய்து தான் பார்ப்போமே" என்று  அவளோட மனதில் ஆசை முளைத்தது.

 

அடுத்தநாள் அவளும் தவம் செய்யத் தொடங்கினால். கடவுள் நினைத்தாள், கடவுளை மட்டும் நினைத்தாள்.. நினைத்து கொண்டே இருந்தாள். தூங்காமள், உண்ணாமல் நினைத்து கொண்டே இருந்தாள்...

 

உடம்பு இளைத்தது. கைகாலெல்லாம் வலித்தது. இருந்தாலும் விடாமல் கடவுளயே நினைத்தாள்... நாட்கள் நீண்டது வாசுகி தவம் செய்கிற செய்தி கடவுளுக்கு எட்டியது. கடவுள் இறங்கி வந்தார்.

 

வாசுகி முன்னால் வந்து நின்னார். " உன் தவத்தை யாம் மெச்சினோம். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்''  அவர் மாட்டிக்கப் போற விஷயம் அவருக்கே தெரியாமல் கேட்டார்.

 

வாசுகி கடவுளை பாத்தாள். ஆகா இதுதான் அருமையான வாய்ப்பு. இதை கெட்டியாக பிடித்து. எல்லாவற்றையும் கேட்கணும் என்று மனசில்நினைத்து கொண்டு.. நான் என் ஆசையைச் சொல்கிறேன் கேளுங்க. என்று கடகட என்று சொல்ல ஆரம்பித்தாள்..

 

ஆழ்கடலுக்குள்ள போக வேண்டும் 

அண்டவெளியைச்சுற்றி வர வேண்டும்

கடந்த காலத்துக்கு போக வேண்டும்

எதிர்காலத்துக்கும் போக வேண்டும்

இறந்தவங்க கிட்டே பேச  வேண்டும்

பிறக்கிறவங்கிட்டேயும் பேச வேண்டும்

மரத்துக்குள்ளே போக வேண்டும்

மனுஷங்களுக்குள்ளேயும் போக வேண்டும்

 

ஆனா எல்லாத்துக்கும் ஒவ்வொரு கருவியாத் தந்திராதீங்க. எல்லாம் செய்கிற ஒரே ஓரு கருவியைத் தாங்க" என்றாள்...

 

வாசுகியோட ஆசையைக் கேட்டுக் கடவுளுக்கே தலை சுத்தியிருக்கும். "பக்தயே, உன் ஆசை பேராசை. ஆனாலும் நீ தவம் செய்தவளாயிற்றே. ஆசையை நிறைவேற்றாமல் இருக்க முடியாதே... இரண்டு நாள் பொறுத்துக்கொள். நான் யோசிக்க வேண்டும்'' என்று சொல்லி மறைந்து போனார்.

 

போனவர் யோசிச்சாரு.. யோசிச்சாரு.. ரூம்போட்டு யோசிச்சாரு. இரண்டு நாளுக்கு அப்புறம் வந்தாரு.

 

"வாசுகி கையை நீட்டு. கண்ணை மூடிக்கொள். உன் ஆசை அனைத்தும் நிறைவேற்றும் அற்புதக் கருவியைக் கண்டுபிடித்து வந்துள்ளேன். அதை உனக்குத் தருகிறேன். அந்தக் கருவியை நன்கு பயன்படுத்தினால் நீ என்னவிடவும் பெரியவளாகி விடுவாய்'' என்றார்.

 

வாசுகி கண்ணை மூடினாள், கையை நீட்டினாள்...

 

கடவுள் அவள் கையில் அந்த அற்புதமான கருவியை வைத்தார். மாயமாய் மறைந்தார்.

 

வாசுகி கண்ணத் திறந்து பாத்தாள்...

 

அண்ட வெளியில் பறக்க வைக்கிற, ஆழ்கடலுக்குள்ள போக வைக்கிற. இறந்தவங்க கிட்ட பேச உதவுற, எதிர்காலத்தை இப்பவே பார்க்கிற அந்த அற்புதமான கருவி எது தெரியுமா?

 

அதுதான் புத்தகம். வாசுகி புத்தகம் வாசிக்கத் தொடங்கினாள். நல்ல வாசகி ஆனாள்.  

by Swathi   on 11 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.