LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

இறப்புக்குள் பிறப்பு

நாட்களின் இறப்பினில்

சுவடுகளாய்ப் பிறந்து

செதுக்கிய கற்களில்

குருதியாய் வடிந்தனர்!



வேதனையில் மூழ்கி

வெயிலிலே தொலைந்து

புழுதியின் நடுவிலே

இரத்தமாய்ப் புதைந்தனர்!



வேற்றுவர் ஆட்சியால்

வேரறுந்து சாய்ந்து

வெள்ளையர் வெறிக்குக்

கற்பினை இழந்தனர்!



தன்நலம் துறந்து

கொள்கைக் கொடி பிடித்து

உயிர் மையாய்க் கசிய

வரலாறாய் வடிவுற்றனர்!



வெளிச்சம் இழந்து

சிறை இருளில் தவித்து

பசியைத் தொலைக்க

வீரத்தை ருசித்தனர்!



பசுமை புல்லில்

குருதியாய்க் கொட்டி

தோட்டாக்கள் துளைக்க

மார்பை விரித்தனர்!



உரிமை நிறுத்த

உயிரைக் கொடுத்து

நம் உணர்வில் கலந்து

உயிர் வாழ்கின்றனர்!



தேசம் வாழ

வெள்ளையரை வேரறுத்த

பாசம் மறவாமல்

தினம் போற்றுவோமே!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: இறப்புக்குள் பிறப்பு   Irappukkul Pirappu   கா.பாலபாரதியின் கவிதைகள்   Kaa.Baala Bharathi Kavithaigal   Kaa.Baala Bharathi Poems   Irappukkul Pirappu Kavithai   Kavithai about Irappukkul Pirappu  
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் தமிழகம் எங்கள் தமிழகம்
நெஞ்சைத் தருவாரோ நெஞ்சைத் தருவாரோ
யாருக்காக வாழ்வேன் யாருக்காக வாழ்வேன்
(இ)(தி)ரும(ன)(ண)ம் (இ)(தி)ரும(ன)(ண)ம்
அவளைப் பாடவா அவளைப் பாடவா
தயக்கம் தவிர் தயக்கம் தவிர்
அது இது அது இது
தோற்றுப் போனேன் தோற்றுப் போனேன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.