LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலைசைக்கோவை

இரவுக்குறி

இறையோன் இருட்குறி வேண்டல்.
176.
சுராதிபர் போற்றுங் கலைசைத் தியாகர்த் தொழாவுயிரை
விராவிய வல்லிருள் போற்கொண்டன் மூட மிடைந்தவிருள்
சராசர முற்றும் விழுங்கிய தால்வழி தான்றடவி
இராவிருந் தெய்தினன் யான்மட வீருங்க ளிம்மனைக்கே. 1

பாங்கி நெறியினது அருமை கூறல்.
177.
சங்குலம் போடைக் கலைசைத் தியாகர் தரணியிற்கார்
மங்குலங் கெங்கு மடங்கல்கக் காநிற்கு மாமடங்கல்
வெங்குல வேழங் களைப்பிளந் துண்ணு மிகுந்தவிருள்
கங்குலஞ் சாதன்ப யார்வரு வாரெங் கடிநகர்க்கே. 2

தலைவன் நெறியினது எளிமை கூறல்.
178.
கல்லால ரெங்கள் கலசத் தியாகர் கலைசையன்னாள்
கொல்லாமற் கொல்லு மிடைக்கே சரிக்கிடை கோளரிகள்
நில்லா வெதிர்குழற் காருக் குடையிரு ணீங்குமல்லில்
அல்லா தரவென் கழலொலிக் கஞ்சிடு மஞ்சலனே. 3

பாங்கி அவன் நாட்டணியியல் வினாதல்.
179.
வெண்டலை மாலைக் கலைசைத் தியாகர் வியன்சிலம்பா
வண்டலை போதுமற் றியாதுடை யாது மலைகலனும்
கொண்டலங் காரஞ்செய் சாந்தமும் யாவை குமுகுமெனும்
தண்டலை யாதுங்க டொண்டைநன் னாட்டுறை தையலர்க்கே. 4

தலைவன் அவள் நாட்டணியியல் வினாதல்.
180.
குழையிட்ட காதர் கலைசைத் தியாகர் குலவரைமேல்
கழையிட்ட தோளிமற் றென்னாட் டணியியல் கட்டுரைத்தென்
மழையிட்ட நின்மலை நாட்டிள மாதர் வனைகலன்பூத்
தழையிட்ட சாந்தநின் றாடிட மீதெனச் சாற்றுகவே. 5

தலைமகற்குப் பாங்கி தன்நாட்டணியியல் சாற்றல்.
181.
ஏந்தண்ணல் வேல கலைசைத் தியாக ரிமாசலமேல்
மாந்தண் ணடையு முடையாக் குருவிந்த மாலிகையும்
காந்தண் மலர்களுஞ் சந்தனப் பூச்சுங் கலந்தணிந்தெம்
பூந்தண் ணடைமட வாரா டிடங்கணிப் பூம்பொழிலே. 6

பாங்கி தலைமகட்குத் தலைமகன் குறையறிவுறுத்தல்.
182.
ஒருகால காலர் கலைசைத் தியாக ருயர்வரைமேல்
அருகால மேகம் பொரிபோ லுடுச்சிந்த வார்த்தெழுந்தீ
ரிருகா லறுகின நால்வாயி னாம்ப விரையருந்தும்
வருகா ரிரவின் வரல்வேண் டினர்நம் மனைக்கன்பரே. 7

நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தல்.
183.
பண்ணவர் போற்றுங் கலைசைத் தியாகர் பரிசுணர்ந்தோர்
பெண்ணறி வென்பது பேதைமைத் தென்று பிரித்துரைத்தல்
திண்ணநெஞ் சேசித் திரகாயம் பாயுஞ் செறியிரவில்
கண்ணன்ன காதலர் தாம்வர லொப்பினள் காரிகையே. 8

தலைமகள் நேர்ந்து பாங்கியொடு உரைத்தல்.
184.
மெல்லிய லாய்தென் கலைசைத் தியாகர்தம் வெற்பிலங்கோர்
வல்லியங் கண்டு நடுங்கிடும் போதெதிர் வந்தெனைப்பாற்
புல்லியப் புல்லைத்தங் கைப்படைக் கூட்டிப் புரந்தவர்தாம்
எல்லி யவாவின சேற்சொல்லு மாறென்னை யின்னுமொன்றே. 9

தலைமகள் நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்கு உரைத்தல்
185.
சிலைவளை யாழியன் போற்றுங் கலைசைத் தியாகர்வெற்பா
மலைவளை யாநின்ற வுன்னெஞ் சுவப்ப வணங்கியங்கை
இலைவளை யாளை யிரந்திரந் தேயிர வீர்ந்தொடைசேர்
தலைவளை யாவருள் செய்யப்‍பெற் றேன்றவந் தானென்னவே. 10

பாங்கி தலைமகனைக் குறியிடத்துநிறுத்தித்
தாய்துயில் அறிதல்.
186.
நஞ்சாருங் கண்டர் கலைசைத் தியாகர்நன் னாடனையாய்
மஞ்சார் புனத்தினின் றாடா நமக்கு மகிழ்ச்சிதந்த
அஞ்சாயன் மென்மயி லாயங்க டேக்கி னகன்குடம்பைத்
துஞ்சாத வண்ணங்கைக் குன்றொன் றுரிஞ்சிச் சுலாய்வருமே. 11

பாங்கி தலைமகட்குத் தலைமகன் வரவறிவுறுத்தல்.
187.
குயிலே யனையசொற் கோமள மேவெண் குரைகடன்மேற்
றுயிலேறு கொண்ட கலைசைத் தியாகர் சுடர்க்கிரிமேல்
மயிலேறு கந்தர்வந் தாலெனக் கங்குனம் மாமனைக்கே
அயிலேந்து நம்மன்பர் வந்தார்தந் தார்பொம்ம லம்மலரே. 12

பாங்கி தலைமகளைக் குறியிடத்துக் கொண்டுசேறல்.
188.
விரலாழி வின்மணித் தீபங் கொடுநம்மை மேவியன்பர்
வரலா லெதிர்கொளப் போதுகம் வரமங்கை மாளிகைகள்
நிரலார் கலைசைத் தியாகேசர் வெற்பினி னீலமஞ்ஞை
முரலாறு காலிசைத் தாலாட்டக் கண்டுயின் மொய்பொழிற்கே. 13

பாங்கி தலைமகளைக் குறியிடத்து உய்த்து நீங்கல்.
189.
தெள்ளம் பணிசெஞ் சடையார் கலைசைத் தியாகர்வெற்பில்
வள்ளம் பெறுமுலை யாயுன்கண் வாயின் வளங்கவர்ந்து
விள்ளம் புயமென்று மாம்பலென் றும்பெயர் வேறுகொண்ட
கள்ளஞ் செறிமல ரெல்லாங்கொய் தேவந்து காட்டுவனே. 14

தலைமகன் தலைமகளைக் குறியிடத்து எதிர்ப்படுதல்.
190.
இலக்கண மாடக் கலைசைத் தியாகர்மற் றிவ்விரவை
வலக்கண் விழித்துப் பகலாக்கச் சற்று மதித்தனரோ
சலக்கணின் கோயிற் கதவந் திறந்ததெத் தந்திரமென்
அலக்கண் டவிரமுன் வந்துநிற் கின்றவின் பாகரமே. 15

தலைமகள் ஆற்றினதருமை நினைந்திரங்கல்.
191.
இடங்க ரநேகஞ் செறியாறு நீந்தி யியங்கரிய
இடங்கர வாமிரு கங்கட்கஞ் சாதன்ப ‍வெண்கணர்க்கோர்
இடங்கரன் றீந்த கலைசைத் தியாக ரிறும்பிலென்னில்
இடங்கர வேலொடு வந்ததெவ் வாறிவ் விரவிடையே. 16

தலைமகன் தலைவியைத் தேற்றல்.
192.
மட்டிட்ட கோதை கலைசைத் தியாகர் வரையகத்துன்
திட்டிக் குடைந்த சமனண்பு கொள்ளவென் றிண்ணியவேல்
ஒட்டிக் கிடந்த வுரிமையி னால்விலங் குள்ளவெல்லாம்
எட்டிக் காக்கவென் வேலொளி மேய்ந்த திருளினையே. 17

புணர்ச்சியின் மகிழ்தல்.
193.
எல்லாரும் போற்றும் கலைசைத் தியாகரை யெய்துமன்பர்
எல்லாஞ்சிவமென் றுகண்டுண்ணல் போலுண்ணவிங்கி வண்மெய்
எல்லா மமிழ்திற் சமைத் துநல் காரண னென்னுடலம்
எல்லாஞ்செந் நாவுடை வாயாக வென்கொ லியற்றிலனே. 18

புகழ்தல்.
194.
அடியார்க் கருளுஞ் சிதம்பர வீச ரணிதிருவெண்
பொடியா ரிருக்குந் திருக்கோ விருந்த புரவரைமேல்
வெடியார் மலர்க்குழ லாய்வனத் திற்றவ மேவிடினும்
கொடியா ருனதிடைக் கொப்பாவ தில்லைக் குணம்படைத்தே. 19

தலைமகனைத் தலைமகள் குறிவரல் விலக்கல்.
195.
கதிரார் கணிச்சிக் கலைசைத் தியாகர் கனவரைச்சூர்
அதிராத் திரிதரு மல்லாம லன்ப வடல்வயமா
வெதிராத் திரியும் வெதிர்வேர்க் கவலை விசும்பிலிருள்
வதிராத் திரியில் வினையேன் பொருட்டினி வாரற்கவே. 20

தலைமகன் தலைமகளை இல்வயின் விடுத்தல்.
196.
வெம்போகி பூண்ட கலைசைத் தியாகர் வியன்வரைப்பூங்
கொம்போ திடுகிடை யீர்கைத் தளிரிற் குளவிகுற்றா
தும்போ தகஞ்செல்லு மொண்பளிங் கிற்றலத் தூடுபயத்
தம்போ ருகமுறல் போற்பஞ்சி யூட்டு மடிகள்வைத்தே. 21

பாங்கி தலைமகளை யெய்திக் கையுறை காட்டல்.
197.
செவ்வாய் தனக்குநின் றிங்கள் முகத்திற்குந் தெவ்வெனலாம்
இவ்வாம்பல் பங்கயங் கொய்துவந் தேனஞ்ச லெவ்விருளும்
ஒவ்வாத கார்க்குழற் கேற்குங்கண் டாய்தைய லுட்புகுந்தென்
வெவ்வாசு தீர்க்குங் கலைசைத் தியாகர் வெளிக்குன்றிலே. 22

198.
கயந்தந்த தெவ்வலர் கங்குற் களைந்தனங் காண்பயந்து
பயந்தந்த வள்கண் விழித்தின் றதட்டிப் பயந்தருமுன்
இயந்தந்த வோசைக் கலைசைத் சிதம்பர வீசர்வெற்பில்
நயந்தந்த செல்விநின் பூங்கோயிற் கொல்லை நடந்தருளே. 23

பாங்கி தலைமகனைப் பின்சென்று வரவு விலக்கல்.
199.
அறவாணர் வாழுங் கலைசைத் தியாகர்வெற் பாரமகில்
மறவா ளெமர்குறைத் தாரழற் கூட்ட வரும்புகையோ
டுறவா ரிருளி லொருநீ தனிவர லூங்கிரவில்
திறவாக் கதவ மொருநூ றணங்கின் றிருமனைக்கே. 24

தலைமகன் மயங்கல்.
200.
அப்பேறு சென்னிக் கலைசைத் தியாக ரசலமின்னே
செப்பேறு கொங்கையு நானும் புணர்ந்தின்பத் தேனருந்தும்
இப்பேறு கண்டு மதுரக் கனியுணு மேல்வையிலோர்
கைப்பேறு காஞ்சிரங் காயிட்ட தென்னக் கழறினையே. 25

தோழி தலைமகள் துயர்கிளந்து விடுத்தல்.
201.
ஓங்குங் கலைசைத் தியாகேசர்க் கன்பில ருள்ளிருள்போல்
வீங்குங் கனையிரு ணீசெல் வதற்கு விதிர்விதிர்த்தே
ஏங்கு மிவளுய்ய நின்னூர்புக் குன்னெழின் மாளிகைமுன்
தூங்கு மணியொலி கேட்பிக்க வேண்டுந் துணைமன்னனே. 26

திருமகட் புணர்ந்தவன் சேறல்.
202.
சரியாங் கறிந்தெம் பதிக்கே குதலெளி தஞ்செழுத்துச்
சரியார்க் கரியர் கலைசைத் தியாகர் தடவரைக்கே
சரியானை மத்தகம் பற்றிடுங் கங்குலிற் றையலங்கைச்
சரியார்ந்த செம்மணி மின்னேவெய் யோற்குச் சரிநிற்குமே. 27

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.