LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலைசைக்கோவை

இரவுக்குறி யிடையீடு

இறைவிக்கு இகுளை இறைவரவுணர்த்தல்.
203.
செய்யா மொழியர் கலைசைத் தியாகர் சிலம்பில்வளைக்
கையா யிஃதென்ன காரண மோநறுங் கான்மலர்க்கை
தையா ரணியத் தயனின்ற புன்னைத் தருவிலன்னம்
மையா மினிமுற்றுங் கண்டுயி லாதல மந்தனவே. 1

தான்குறிமருண்டமை தலைவிஅவட்குரைத்ததல்.
204.
நானோர் குறியினை நங்கோன் குறியென்று நாடிச்சென்று
கானோவ நின்றுறு புள்‍ளொலி கேட்டுக் கலைசையிலெம்
மானோர் சிதம்பர மாதே வனைவணங் காரின்வினை
தானோ விதுவென்று நொந்துவந் தேன்பின்னைத் தாழ்குழலே. 2

பாங்கி தலைமகன் தீங்கெடுத்தியம்பல்.
205.
வேயோ வெனும்பசுந் தோளாய் கலைசையுண் மேவிமனத்
தூயோர் பரசுஞ் சிதம்பர வீசர் றொழாதவர்போல்
நீயோகை யின்றி நெடுமூச் செறிய நிகழ்த் துமந்தத்
தீயோர் துணிந்துனக் கையுற வாங்குறி செய்தனரே. 3

தலைமகன் புலந்துபோதல்.
206.
விழுத்தவஞ் செய்சத பத்திரத் தாள்வெளி மேவுமென்றே
முழுத்தமந் தன்னிற் கலைசைத் தியாகர் முளரியந்தாள்
வழுத் தல்செய் யாதவர் தீவினை போல வளைத்தெனைநீ
இழுத்தலைத்தாய்நெஞ்சமேயென்சொல்வேனிந்த வேழைமைக்கே. 4

புலர்ந்தபின் வறுங்களந் தலைவிகண்டிரங்கல்.
207.
கங்காள வேடர் கலைசைத் தியாகர் கழித்தமுண்ட
கங்கா ளலம்புசங் கங்காள் கடற்கரைக் கானற்புன்னா
கங்காளெங் காவலர் யான்வந்து போனபின் காதலுருக்
கங்காண வந்தன ரோவுண்மை சொன்மின்கள் கங்குலிலே. 5

இதுவுமது.
208.
திருவார் கலைசைத் தியாகேச ரைத்தரி சித்தவர்போற்
குருவா லரும்பு நகைமுத்தங் காட்டிப்பொன் கூர்பவள
உருவாய் மலர்ந்துகொங் கையேந்திப் பாசடை யோதியணி
தருவாலைப் புன்னைநல் லாய்மகிழ்ந் தாயுன் றலைவர்க்கண்டே. 6

தலைமகள் பாங்கியொடுரைத்தல்.
209.
நிறப்பது மானன நேரிழை யாயென் னெடுங்கொடிய
பிறப்பவை மாற்றுங் கலைசைத் தியாகரைப் பேணினர்போற்
சிறப்பவர் தண்டுறைச் சேர்ப்பரங் கேகுறி செய்வதற்கு
மறப்பர் கொ‍லோமழை தான்பெய்யுங் கால மறக்கினுமே. 7

தலைமகள் அவலம் பாங்கி தணித்தல்.
210.
குன்றேவிற் கொண்ட கலைசைத் தியாகரைக் கூறலர்போல்
இன்றே னிரங்குத லேந்திழை யாயன்ப ரேழ்பரித்தேர்ப்
பொன்றேசிழந்துபொய்த்தாலும்பொய் யாரென்றும் பூண்டதள
வொன்றே றியகவி மாலை யரசுகண் டோர்ந்து கொள்ளே. 8

இறைவன்மேற் பாங்கி குறிபிழைப் பேற்றல்.
211.
செழுந்தேஞ்சிகழிகைத்திண்புயத்தீரெம்மைச்செல்லல் வெந்தீக்
கொழுந்தேற வைத்தனிர் பின்புவந் தாற்றலிர் கும்பியினீ
அழுந்தேலென் றாளுங் கலைசைத் தியாக ரடுக்கலும்மூர்க்
கெழுந்தே வரத்துணிந் தேம்பாலி யாறொன் றிருந்தியதே. 9

இறைவிமேல் இறைவன் குறிபிழைப் பேற்றல்.
212.
குறப்பேதை யர்க்குக் குலதெய்வ மாய்வந்த கோமளமான்
மறப்பேறு சித்த முடையவ ளாயினு மாதவிழாச்
சிறப்பேறு தொட்டிக் கலைவாழ் சிதம்பர தேவன்வெற்பிற்
பிறப்பே ழினுமற வேனுங்கண் மங்கையைப் பெண்கொடியே. 10

தலைமகள் குறிமருண்டமை தோழி தலைமகற்குரைத்தல்.
213.
கொய்யு மலர்ச்சுனை மாங்கனி வீழ்தொறுங் கொற்றவநீ
செய்யுங் குறியென் றடிக்கடி பார்த்துத் திகைத்தழுங்கி
மையுண்ட கண்டர் கலைசைத் தியாகரை வாழ்த்தலர்போல்
நையும் படியெழுத் தோவென்று மீண்டன ணன்னுதலே. 11

அவன்மொழிக்கொடுமை சென்று அவளவட்கியம்பல்.
214.
வெங்கோ ளரிதிரி யாமத்தி யாம்வந்து வீயெழுப்பாப்
பைங்கோழி கூவள வுங்கறங் கச்செய்து பார்த்துநின்றே
செங்கோ கனகத் திருவே கலைசைத் தியாகர்வெற்பர்
எங்கோ விருந்த புரநோக்கிச் சென்றன மென்றனரே. 12

என்பிழைப்பன்றென்று இறைவி நோதல்.
215.
நீளுஞ் சுனைக்கய லாண்மிசைப் பாய்தொறு நேடியங்கென்
தாளுந் தளர்ந்திடச் செல்லா திறுத்தனன் றையன்மெய்யர்
நாளும் பழிச்சுங் கலைசைத் தியாகர்நன் னாடர்கொன்னே
மீளும் படிசெய் தனரென்ப ரே‍லென் விதியென்பதே. 13

தாய் துஞ்சாமை.
216.
சித்தாங் கலைசைத் தியாகர் நொடித்தலைச் செய்யுமந்நாட்
கொத்தார் தமோமயம் போலுமிக் கங்குற் குளிர்ந்ததடத்
தெத்தா மரையு முறங்கநம் மன்னை யிரண்டுநய
னத்தா மரைமுகி ழாவென்ன காரண நன்னுதலே. 14

நாய் துஞ்சாமை.
217.
இணங்குமன் றேயிந்தப் பெண்ணென் பிறப்பன்ப ரிங்குறமால்
வணங்குங் கலைசைச் சிதம்பர வீசரை வாழ்த்தலின்றிப்
பிணங்கும் புறமதத் தார்குரைத் தாங்கிப் பிறங்கிருள்வாய்ச்
சுணங்குக் கணங்கள் குரைத்தன்னை துஞ்சினுந் துஞ்சலவே. 15

ஊர் துஞ்சாமை.
218.
விண்ணேறு சோலைக் கலைசைத் தியாகர் வியன்சிலம்பின்
கண்ணேயிக் கங்குலென் கண்ணே யனையவர்க் காண்பதெங்கே
பெண்ணே குணக்கிற் புகர்தோன் றளவும் பெருங்குறிஞ்சிப்
பண்ணே யெடுத்துப் பகர்ந்துறங் காரிப் பதியவரே. 16

காவலர் கடுகுதல்.
219.
நாவலர் போற்றுங் கலைசைச் சிதம்பர நாதர்வெற்பில்
மாவல ரோட்டுநம் மன்பர்பொற் றேரொலி மாற்றுவித்தென்
கோவல ரோடவிவ் வெல்லியி லல்லியங் கோதைநல்லாய்
காவலர் கைப்பறை யோசையம் ‍பேறுமென் காதகத்தே. 17

நிலவுவெளிப்படுதல்.
220.
கொவ்வைகொள்வாய்ச்சிகலைசைத்தியாகர்குளிர்கண்ணதாய்க்
கவ்வைக டீர்க்கு நிலவீரெண் வெள்ளைக் கலைகளினால்
இவ்வைய முற்று மடங்கிடப் போர்த்தலி னெம்மன்னரே
றவ்வைய முங்கொண்டு கோடையெவ் வாறிங்கடுத்திடுமே. 18

கூகை குழறல்.
221.
கோட்டா லமர்ந்த கலைசைத் தியாகநங் கூத்தனைவெண்
கோட்டாற் செயுங்குழை யானைத் தொழாத கொடியவர்சொற்
கோட்டாலை போல்வல்லி நாம்பெரும் பேமுறக் கூரிருள்வாய்க்
கோட்டான் மராமர மேலேறிக் கொண்டு குழறிடுமே. 19

கோழி குரற்காட்டுதல்.
222.
ஆழிப் புரிசைக் கலைசைத் தியாக ரடுக்கன்மின்னே
சூழிக் களிற்றண்ணன் மார்பணி மாணிக்கச் சோதிகண்டே
ஊழிப் பொழுது புலர்ந்ததென் றோநள் ளுறுமிரவிற்
கோழிக் குலங்கண்மன் கூவா வெழுப்புங் குறிச்சியையே. 20

இதுவுமது.
223.
செவ்வேலை யைந்துசெய் தாளுங் கலைசைத் தியாகர்வெற்பர்
கைவ்வேலை யந்த வருணோ தயமெனக் கண்டுமருண்
டிவ்வேலை யாவ விடியலென் றோவிவ் விடையிருளில்
அவ்வேலை யார்த்தெனக் கூக்குரல் காட்டிடு மாண்டலையே. 21

15. வரைதல் வேட்கை.

தலைமகளைப் பாங்கி பருவரல் வினாதல்.
224.
அம்மனை யானவர் தம்முனி வுண்டுகொ லக்கலைசை
அம்மனை யாக்கொள் சிதம்பர வீச ரருளன்னநீ
அம்மனை யாடிலை யூசல் கயிறற்ற தோவறியேன்
அம்மனை யாநிற்றியென்னோசொல் லாயுன் னகங்கொண்டதே 1

தலைமகள் அருமறை செவிலியறிந்தமை கூறல்.
225.
அருத்தியி னீங்கிக் கலைசைத் தியாக ரசலத்தெமை
வருத்திய வன்ப ருருவெளித் தோன்ற வரவுவினாய்
உருத்திகழ் தாரிடு மால்பார்த் திதிலொன் றுளதெனநம்
கருத்தின் முளைத்த வொருபுத வின்றனை கண்டனளே. 2

தலைமகள் தலைமகன்வருந்தொழிற்கு அருமைசாற்றல்.
226.
உலைவுற்ற காலன்னை ஞாளியிவ் வூர்கண் ணுறங்கினுமூர்த்
தலையுற்ற காவலர் காய்வார் மதிதனைத் தந்ததொப்பாம்
மலையுற்ற கூகையும் வாரணக் கூட்டமும் வாயடையா
கலைசைத் தியாகர் வரையன்பர் காட்சியென் கட்கரிதே. 3.

தலைவி தலைமகனூர்க்குச் செல ஒருப்படுதல்.
227.
ஒருப்பா டுடனென் னலனுண்ட தேர்மன்ன ரூரகம்போய்
விருப்பா லவருட னெய்துவ மோதெய்வ வேதமெனும்
திருப்பா துகையிட்ட தாளார் கலைசைத் தியாகர்வெற்பிற்
சுருப்பா குலமல்கு பூங்குழன் மாங்குயிற் றூமொழியே. 4.

பாங்கி தலைவனைப் பழித்தல்.
228.
செய்யகத் தேகன்னற் சாறூர் கலைசைத் தியாகர்வெற்பர்
மெய்யகத் தேயுற்ற வின்னுயிர் போனம்மை மேவியொன்றாய்ப்
பொய்யகத் தேவைத்துப் பின்னாண் மறந்தனர் பொன்னனையாய்
வையகத் தேயில்லை யாலவர் போலொரு வன்கணரே. 5.

தலைமகள் இயற்பட மொழிதல்.
229.
சிந்திக்கு நேரும் விழிமொழிப் பாங்கி திகைத்துளங்க
சிந்திக்குருகென்கைவிட்டோடற்கேங்கல்வெண்டிங்களென்றூழ்
சிந்திக்கு நந்தினுந் தென்பூங் கலைசைத் தியாகர்வெற்பன்
சிந்திக்கு மோவொரு தீமைநம் பாற்செயல் சித்தத்திலே. 6.

தலைமகள் கனவுநலிவுஉரைத்தல்.
230.
இலவா ரிதழி சிதம்பர வீச ரெழிற்கலைசைப்
புலவா ரயிலன்ப ரென்கன வூடு புகுந்துதழீஇப்
பலவா றினிதின் விளையாடப் பெற்றும் பயன்கொணலம்
கலவா திழந்தணை தைவந் தனனிரு கண்விழித்தே. 7.

கவினழிபு உரைத்தல்.
231.
சேணேறு பொன்னெயில் சூழுங் கலைசைத் தியாகர்வெற்பில்
தூணேர் புயத்தன்பர் சேர்ந்தா லகன்றவர் தூரஞ்சென்றால்
ஊணேது மற்றவர் போல்விரைந் தொன்றி யொளிவளையாய்
வீணே பசலை விருந்தாக வுண்ணுமென் மெய்யழகே. 8

232.
கொழிவான நீற்றர் கலைசைத் தியாகரைக் கூறலர்போற்
பழிவாய்ந்த வென்கட் பசலையின் கொள்ளையைப் பார்த்துநல்ல
வழிவாய்ந்த வன்பர் திருச்செவிக் கேற வகுத்தெடுத்து
மொழிவா ரொருவருண் டேனாமு முய்குவ மொய்குழலே. 9

துன்புறு பாங்கி சொல்லெனச் சொல்லல்.
233.
இவருக் கணியுங் கலைசைத் தியாகர்க் கினியவெற்பர்
தவருக்கு நேர்நுத லாய்பிரி வாரிற் றணந்தெனுள்ளத்
தெவருக்குந் தோன்றா தொளித்தென் னிடர்களெல் லாமறிவார்
அவருக் கினிப்புதி தாயென்னை யானொன் றறிவிப்பதே. 10

அலர்பார்த்துற்ற அச்சக்கிளவி.
234.
மங்கல மோங்குங் கலைசைத் தியாகர் மணிவரைமேற்
கொங்கலர் கூந்தற் கொடியே மதன்விடுங் கோலெனுங்கூர்
தங்கல ருக்குந் தடமுலை மாதர் தடையறவாய்
பொங்கல ரான தழற்குமென் கட்புனல் பொங்கிடுமே. 11

ஆறுபார்த்துற்ற அச்சக் கிளவி.
235.
திருந்தா ரியந்தமிழ் தேருங் கலைசைத் தியாகர்வெற்பர்
அருந்தா ரியங்குநின் றிங்குவந் தேகு மமயத் தல்லில்
முருந்தா ரியனகை பாதமுட் டைத்தின்னன் முற்றியதேல்
மருந்தா ரியம்புவ ரென்றோபின் னேயென்மனஞ்செல்வதே. 12

காமமிக்க கழிபடர்கிளவி.
236.
அன்னின்ற கண்டர் கலைசைத் தியாகருக் கன்பிலர்போல்
முன்னின் றகன்றவர் தாம்வரு நாண்மொழி யாவிடினும்
மன்னின்றதண்பெண்ணைகாள்புன்னைகாளென்னை மையல்கொண்டே
என்னின் றழுதியென் னீருங்கள் கேண்மை யினிதினிதே. 13

தன்னுட் கையாறெய்திடு கிளவி.
237.
சொல்லரிக் காடுங் கலைசைத் தியாகர் துறைக்கடல்வாய்ப்
புல்லரி தாங்கன்னித் தாழையி னீழற் புணர்ந்தகன்ற
நல்லரிங் கேவரக் காணா விடிற்றழ னாப்பணிட்ட
வல்லரி யாவதல் லாதுய்தி யேது மடநெஞ்சமே. 14

தலைமகள் நெறிவிலக்குவித்தல்.
238.
விழியேறு நெற்றிக் கலைசைத் தியாகர்பொன் வெற்பிற்செப்பும்
பழியேற வேறச் சுமப்பவ ராரெங்கும் பாயிருள்வாய்க்
குழியேறு மேடு தடவி வராநின்ற கொற்றவர்க்குன்
மொழியேற வேண்டு மினிநீர் வரலென்று முற்றிழையே. 15

தலைமகன் குறிவிலக்குவித்தல்.
239.
மன்னுந் தமிழ்த்தென் கலைசைத் தியாகர் மலைமடந்தாய்
மின்னுங் குருமணிச் சாரற் புனத்தில் விளைந்ததினை
இன்னும் புதல்வியை யெம்மனை காக்கவங் கேவினளென்
றுன்னுங் கருத்தருக் கெல்லி வராவகை யொன்றுரையே. 16

வெறி விலக்குவித்தல்.
240.
செறியார பார முலையாய் கலைசைத் தியாகர்வெற்பர்
பிறியா மயலினை முன்னா ளெனக்கருள் பெற்றிசற்றும்
அறியாமை யின்வரைச் சூர்கோட்பட் டாளென் றனைமுயலா
வெறியா டலையது தீர்ப்பான் வெறியற வேண்டினளே. 17

பிறர் விலக்குவித்தல்.
241.
ஆதி நடேசர் கலைசைத் தியாக ரசலத்தெண்ணில்
தூதினி தாவரக் கண்டன மன்றியுஞ் சோலையின்பால்
ஏதிலர் மாநிதிப் பேழையொ டெய்தின ரென்னவின்றென்
காதினு ளராழற் கோல்பாய்ந்த தொத்தது காரிகையே. 18

குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தல்.
242.
இரவோர்க் குதவுங் கலைசைத் தியாக ரிருங்குன்றத்தோர்
கரவோ திடாமலுங் கற்பழி யாமலுங் காதலித்த
உரவோன் வரைவெதிர் கொள்ளும் படியின் றுரிமையினம்
குரவோர்க் கறிவிப்ப தெவ்வா றுரைத்தி கொடியிடையே. 19

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.