LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

எதிர்காலத்தில் செவ்வாய்க்கும் ராக்கெட் அனுப்புவோம் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்பட்ட பின்பு ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் அளித்த  பேட்டி, பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட் மூலம் வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் பணி நேற்று வெற்றிகரமாக நடந்துள்ளது. 9.51 மணிக்கு ராக்கெட் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விண்வெளியில் சுற்றிவரும் விண்வெளி கழிவுகளில் ராக்கெட் மோதுவதை தவிர்க்க 2 நிமிடம் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது. சந்திரனை ஆய்வு செய்யும் சந்திராயன்-2 திட்டம் 2014-ல் செயல்படுத்தப்படும். இதில் தரை இறங்கும் தொழில்நுட்பம் ரஷியாவில் இருந்து வரவேண்டும். பறக்கவிடும் தொழில்நுட்பம் நன்மை சார்ந்தது. நமது பணிகள் திட்டமிட்டப்படி நடந்து வருகின்றன. ரஷிய பணிகள் முடிந்து வந்ததும் சந்திராயன்-2 பறக்க விடப்படும். செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது சவால் நிறைந்தது. விண்வெளி துறையில் கடந்த 50 ஆண்டுகளாக பல சாதனைகளை இந்தியா புரிந்துள்ளது. விண்வெளி துறையில் சாதனைகள் செய்து வரும் 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே சவால்கள் நிறைந்த செவ்வாய் கிரகத்துக்கு வருங்காலத்தில் ராக்கெட் அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறினார்.

by Swathi   on 10 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.