இத்தாலி கடற்படை வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பியதால் எழுந்த எதிர்ப்பை அடுத்து இத்தாலி வெளியுறவு துறை அமைச்சர் கிளியோ டேர்சி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்திய மீனவர்கள் சுட்டுகொன்ற வழக்கில் இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். இத்தாலி தேர்தலில் வாக்களிக்க இருவரும் அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டனர். தேர்தலுக்கு பின் கடற்படை வீரர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இத்தாலி அரசு மறுத்தது, இந்தியாவின் அழுத்தத்திற்கு இத்தாலி அரசு பணிந்ததை அடுத்து கடற்படை வீரர்களை இத்தாலி திருப்பி அனுப்பியது. இதனால் எழுந்த எதிர்ப்பை அடுத்து இத்தாலி வெளியுறவு துறை அமைச்சர் கிளியோ டேர்சி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
|