LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - திரை விமர்சனம் !!!

நடிகர்கள் : விஜய் சேதுபதி

 

நடிகைகள் : நந்திதா, சுவாதி

 

இயக்கம் : கோகுல்

 

இசை : சித்தார்த்

 

ஒளிபதிவு : மகேஷ் முத்துசாமி

 

விஜய் சேதுபதி - நந்திதா காதல், அஸ்வின் - சுவாதி காதல், துப்பறிதல் போன்ற மூன்று கதை களங்களையும் ஒன்றாக சேர்த்து காமெடி கலந்து கொடுத்திருக்கும் படம் தான் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

 

ஹவுசிங் போர்டில் குடியிருக்கும் சுமார் மூஞ்சி குமாராக வரும் விஜய் சேதுபதிக்கு எதிர் வீட்டு குமுதாவாக வரும் நந்திதா மீது ஒரு தலைக்காதல். இதனால் ஏற்படும் எதிர்ப்புகளும், பிரச்சனைகளும் ஒருபுறம். வங்கியில் மார்க்கெட்டிங் வேலை செய்யும் அஸ்வினும், சுவாதியும் காதலிக்கிறார்கள். அஸ்வின், மார்க்கெட்டிங் வேலையில் ஏற்படும் ஒரு சிறிய பிரச்சனையின் காரணமாக, குடித்து விட்டு வண்டியை ஒட்டி ஒரு பெண்மணிக்கு விபத்து ஏற்படுத்தி விடுகிறார், பிறகு அந்த பெண்மணியை மருத்துவ மனையில் சேர்க்கிறார். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு அவசரமாக ரத்தம் தேவைபடுகிறது. அதற்காக விஜய் சேதுபதியை டாஸ்மாக்கிற்கு தேடி வருகிறார்கள் அஸ்வினும் அவரது நண்பர்களும். 

 

அஸ்வின் குடித்த ஒயின்சாப்பில் ஒரு கொலை நடக்கிறது. கொலையாளிகள் விஜய்சேதுபதி செல்போனை திருடி தப்பித்து விடுகின்றனர், உயிருக்கு போராடும் பெண்மணிக்கு விஜய்சேதுபதியின் அரிய வகை ரத்தம் தேவை. கொலை செய்த இடத்தில் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் விபத்தில் சிக்கிய பெண்மணியின் கணவன்.

 

இவை எல்லாம் சரியாகி விஜய்சேதுபதியின் ரத்தம் பெண்மணிக்கு கிடைத்ததா, அஸ்வினின் காதல் என்னவானது, கொலையாளிகள் சிக்கினரா, செல்போன் விஜய்சேதுபதிக்கு திரும்ப கிடைத்ததா, விபத்தில் சிக்கிய பெண்மணியின் கணவர் தப்பித்தாரா போன்ற கேள்விகளுக்கு பதிலை "குடி குடியை கெடுக்கும்" என்ற கருத்தை சொல்லி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.

 

படத்தில் விஜய் சேதுபதி தோன்றும் காட்சிகளால், ரசிகர்களின் சிரிப்பு சத்தத்தால், திரையரங்கம் முழுவதும் அதிர்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் மருத்துவமனையில் சேதுபதி அடுக்கும் லூட்டி இருக்கிறதே.....சான்சே இல்ல....

 

படம் எப்படியிருந்தாலும் விஜய்சேதுபதிக்கு இந்த படம் மற்றுமொரு மயில்களாக இருக்கும். நந்திதா மீது ஒரு தலை காதல் கொண்டு அவரை டார்ச்சர் செய்யும் போதும், பசுபதியிடம் தன் காதலை மொக்கை இங்கிலீஷூடன் விவரிக்கும் போதும், க்ளைமாக்ஸில் காதலியை இம்ப்ரெஸ் செய்ய ரத்தம் கொடுக்க செல்லும் போதும் அசத்தோ அசத்து என்று அசத்தியிருக்கிறார்.

 

படித்த இளைஞராக வரும் அஸ்வின் காதலியிடமும் உயரதிகாரியிடமும் சூழ்நிலைக்கேற்ப பொய் சொல்லி சமாளிக்கும் போக்கில் இன்றைய நடுத்தர வர்க்க இளைஞர்களை கண்முன் நிறுத்துகிறார். அதிலும் வங்கி மேனேஜர் போன் பண்ணும்போது ஒரே அறைக்குள் இருந்து கொண்டு அஸ்வின் நண்பர்கள் போன் பேசும் காட்சி இருக்கிறதே...செம காமெடி ....

 

நந்திதா விஜய்சேதுபதியை காதலிக்காமல் திட்டிக் கொண்டே இருப்பதும்... கடைசி நேர இக்கட்டிற்காக விஜய்சேதுபதியிடம் நெருங்கி வந்து ரத்தம் கொடுக்க வைப்பதும், கடைசியில் காதலுக்கு முந்தைய நிலையை அடையும் போதும் நன்றாக இருக்கிறது.

 

சென்னையில் வாழும் டிபிக்கல் பெண் கதாபாத்திரம் ஸ்வாதிக்கு. ஒரு வார்த்தைக்கு ஒரு அர்த்தம் கண்டுபிடிக்கும் போதும், காதலன் பொய் சொல்வதை கண்டுபிடித்து அவன் எங்கு இருப்பான் என யூகித்து அங்கு சென்று பிடிக்கும் போதும் பிரச்சனைகளில் அவனை விட்டு விலகிச் செல்லாமலும் சிறப்பாக செய்துள்ளார்

 

அண்ணாச்சியாக பசுபதி, சூரி, எம் எஸ் பாஸ்கர் என வருகிற கதாபாத்திரங்கள் எல்லாமே காமெடியில் ரகளை செய்திருக்கிறார்கள்.

 

சித்தார்த் இசையில் ஒரு பாடல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், பின்னணி இசை பரவாயில்லை. 

 

மொத்தத்தில் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" - காதல், காமெடி, புலனாய்வு......

by Swathi   on 02 Oct 2013  1 Comments
Tags: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா   Itharku Thana Aasaipattai Balakumara                 
 தொடர்புடையவை-Related Articles
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - திரை விமர்சனம் !!! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - திரை விமர்சனம் !!!
கருத்துகள்
31-Oct-2013 01:42:01 Immanu said : Report Abuse
Vijay sethupathi acting very nice ninthitha eyes very beauti fu5
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.