|
||||||||
இதயத்துள் உறைகின்ற மேகம் |
||||||||
ஒரு சிறகுமுளைத்த கவிஞனைப்போல
மேகம்
சுதந்திரமாய்த் திாிகிறது.
ஆகா
அது வானம்.
அடியும் முடியும் தொியவே மாட்டாத
திறந்து கிடக்கின்ற சுவனம்
அதைப்பார்த்து மயங்குவதா?
இல்லை,
மேகத்தைப் பார்த்து மனம் ஏங்குவதா?
நான் நினைக்கிறேன்,
இந்த நூற்றாண்டில் வெண்மேகம் மட்டும்தான்
பாிபூரணமான சதந்திரத்தை
அனுபவிக்கின்ற ஒன்றென்று.
இது
தும்பிக்குக் கூட
சிறகுகள் நோண்டப்பட்டு
வாலில் கடதாசி முடியப்பட்ட யுகம்.
'மேகம்'
அதற்கு வாலும் இல்லை
சிறகும் இல்லை
வெட்டுதற்கு.
அதனால்தான் அது
சிறு குழந்தையின் மனம்போல பூக்கிள்ளி முகருவதும்
பிறகு கழிப்பதுமாய்
வானப் பூந்தோப்பில் மேய்கிறது மேய்ச்சல்....
இந்த வகையில்தான்
நான் வெண்மேகத்தை விரும்புகிறேன்.
அதைப்போல நானுமொரு பஞ்சுப் பொதியாகி
நினைத்தால் நின்று
தேவையென்றால் நடைகட்டி
யாாின் கெடுபிடிக்கும் வால்முறுக்க மாட்டாமல்
வாழும் நிலையொன்று எனக்கும் கிடைக்குமென்றால்
எப்படி இனிக்கும் சுகம்!
இன்று
மிகவும் சுதந்திரமாய்,
ஒன்றுக்கு ஒன்று குதிநக்கும் கொடுமைக்கே
இடமற்றுக் காற்றுப்போல்
திாிகின்ற ஒன்றென்றால்,
நான்
மீண்டும் வலியுறுத்த நேர்கிறது
அது வெண்மேகமாகத்தான் இருக்க முடியுமென்று.
என்பிாிய வெண்மேகத்தைப் பற்றி
இனியாச்சும் நானொரு
கவிதை எழுதவேண்டும்.
மனம்
அதிகாலையைப்போல குளிர்ந்து கிடக்கையில்
இருக்கின்ற கற்பனை அனைத்தையும்
அள்ளித் தௌித்து
பஞ்சு மேகத்தைப் பாடி
சிம்மாசனமேற்றிப் பார்க்கத்தான் வேண்டும்.
ஒரு சிறகுமுளைத்த கவிஞனைப்போல மேகம் சுதந்திரமாய்த் திாிகிறது.
ஆகா அது வானம். அடியும் முடியும் தொியவே மாட்டாத திறந்து கிடக்கின்ற சுவனம்
அதைப்பார்த்து மயங்குவதா? இல்லை, மேகத்தைப் பார்த்து மனம் ஏங்குவதா?
நான் நினைக்கிறேன், இந்த நூற்றாண்டில் வெண்மேகம் மட்டும்தான் பாிபூரணமான சதந்திரத்தை அனுபவிக்கின்ற ஒன்றென்று.
இது தும்பிக்குக் கூட சிறகுகள் நோண்டப்பட்டு வாலில் கடதாசி முடியப்பட்ட யுகம்.
'மேகம்' அதற்கு வாலும் இல்லை சிறகும் இல்லை வெட்டுதற்கு. அதனால்தான் அது சிறு குழந்தையின் மனம்போல பூக்கிள்ளி முகருவதும் பிறகு கழிப்பதுமாய் வானப் பூந்தோப்பில் மேய்கிறது மேய்ச்சல்....
இந்த வகையில்தான் நான் வெண்மேகத்தை விரும்புகிறேன். அதைப்போல நானுமொரு பஞ்சுப் பொதியாகி நினைத்தால் நின்று தேவையென்றால் நடைகட்டி யாாின் கெடுபிடிக்கும் வால்முறுக்க மாட்டாமல் வாழும் நிலையொன்று எனக்கும் கிடைக்குமென்றால் எப்படி இனிக்கும் சுகம்!
இன்று மிகவும் சுதந்திரமாய், ஒன்றுக்கு ஒன்று குதிநக்கும் கொடுமைக்கே இடமற்றுக் காற்றுப்போல் திாிகின்ற ஒன்றென்றால், நான் மீண்டும் வலியுறுத்த நேர்கிறது அது வெண்மேகமாகத்தான் இருக்க முடியுமென்று.
என்பிாிய வெண்மேகத்தைப் பற்றி இனியாச்சும் நானொரு கவிதை எழுதவேண்டும்.
மனம் அதிகாலையைப்போல குளிர்ந்து கிடக்கையில் இருக்கின்ற கற்பனை அனைத்தையும் அள்ளித் தௌித்து பஞ்சு மேகத்தைப் பாடி சிம்மாசனமேற்றிப் பார்க்கத்தான் வேண்டும்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|