LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

இவரைப் பற்றிய இனிய செய்திகள்

 ஒரு முறை ஒரு அரசன் கிராமம் வழியாக வந்து கொண்டிருந்தான் . அப்போது வழியில் தள்ளாடும் கிழவன் ஒருவன் ஒருமரக்கன்றினை நட்டுக்கொண்டிருந்தான் .

அவனைப் பார்த்த அரசன் “ என்ன கிழவரே காடு வா வா என்கிறது . வீடு போ போ என்கிறது . இந்த நிலையில் மரம் நட்டு அது பயனளிக்கும் வரையில் உயிரோடு இருப்பீர்களா ?” என்று கேட்டான் .

அதற்கு கிழவன் “ அரசே என் முன்னோர்கள் நான் பயன்பெறுவதற்காக இந்த மரங்களை நட்டுச்சென்றுள்ளார்கள் . அதே போல நானும் என் பின்னால் வருபவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதால் இந்தக் கன்றை நடுகிறேன் ” என்றார் .

இது போன்ற உயர்ந்த குணம் உடையவர்களால் தான் நாடு வளமுடனும் , நலமுடனும் திகழ முடியும் , அப்படிப்பட்ட குணமுடையவர் நம் பெருந்தலைவர் .

எளிமை

பெருந்தலைவர் காமராசர் காங்கிரஸ் காரியக் கமிட்டித்தலைவராக இருந்த போது ஜெய்ப்பூரிலே ஒரு மாநாடு நடந்தது . அங்கே உள்ள மக்களில் பெரும்பாலோருக்கு இந்திதான் தெரியும் . கூட்டத்திலே ஆங்கிலத்திலே பேசினவர்களை எல்லாம் மக்கள் “ பைட்டோ பைட்டோ இந்தி மே போலே “ ன்னு கத்தினாங்க . அதாவது இந்தியிலே பேசு இல்ல உட்காருன்னு ” அர்த்தம் .

பெருந்தலைவர் மனதுக்குள் சங்கடப்பட்டார் . அவருக்குத் தமிழைத் தவிர ஆங்கிலம் கூட சரியாக வராத நிலை . வேறு வழியில்லாமல் சுருக்கமாக இரண்டொரு வார்த்தை பேசி விட்டு அமர்ந்தார் . ஆனால் மக்கள் இன்னும் பேசுங்க தமிழிலேயே பேசுங்க பரவாயில்லைன்னு கத்தினார்கள் பெருந்தலைவருக்கு குழப்பமாகி விட்டது .

கூட்டத்திலே ஒருத்தர் மக்களிடம் “ அதென்ன அவர் மட்டும் பேசலாம்னு சொல்றீங்க என்று கேட்டார் . அதற்கு அந்த மக்கள் காமராசர் எங்களை மாதிரி ரொம்ப எளிமையா தெரியறாரு . அவரினால் எங்களுக்கு நன்மை கிடைக்கும் . அவர் எங்கள் “ கறுப்புக் காந்தி ” என்று புகழ்ந்தார்கள் . காமராசரின் எளிமை மொழி தெரியாத ஊரிலும் மரியாதையைக் கொடுத்தது .

நேர்மை

காமராசர் முதலமைச்சராக இருந்த நேரம் . ராஜாஜி எதிரணியில் இருக்கிறார் . மாம்பலம் சி . ஐ . டி . நகரத்தில் ராஜாஜி சேவா சங்கம் என்ற அமைப்பைச் சார்ந்த கட்டிடம் கட்டியிருந்தார்கள் .

ஆனால் சி . ஐ . டி . நிறுவனத்தினர் அந்தக் கட்டிடம் தங்களோட விதிமுறைகளுக்கு முரணாக கட்டப்பட்டதாகக் கூறி அந்தக் கட்டிடத்தை இடித்து விட்டார்கள் . இந்த விஷயம் பெருந்தலைவருக்குத் தெரிய வந்தது . ராஜாஜி எதிரணி என்பதால் பெருந்தலைவர் இதைக் கண்டு கொள்ள மாட்டார் என்று எல்லோரும நினைத்தார்கள் . ஆனால் பெருந்தலைவர் சி . ஐ . டி . நிறுவனத்தினரை அழைத்து விசாரித்து அவர்கள் அதிகார துஷ்பிரயோகம் பண்ணியிருப்பதைக் கண்டுபிடித்து அவர்கள்செலவிலேயே உடனடியாக அந்தக் கட்டிடத்தைப் புதிதாகக் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று அறிக்கையோடு உத்திரவு பிறப்பித்தார் . அதே போலவே சி . ஐ . டி . நிறுவனத்தினர் புதிய கட்டிடத்தைக் கட்டிக்கொடுத்தனர் . இப்போதும் அந்தக் கட்டிடம் மாம்பலம் சி . ஐ . டி . நகரில் இருக்கிறது . பெருந்தலைவரின் பெருந்தன்மைக்கு இதுவும் ஒரு சான்றாகும் .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.