LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலைசைக்கோவை

இயற்கைப்புணர்ச்சி

இரந்து பின்னிற்றற்கெண்ணல்.
நலசத் தியர்தென் கலைசா புரியுறை நாதரெல்லாம்
வலசத் தியாகர் கலசத் தியாகரை மானநெஞ்சே
சலசத்தி யன்னவர் பின்னின் றிரந்திடிற் றாங்குதனக்
கலசத் தியாக மிவருந் தருவர் களிப்புறவே.

இரந்து பின்னிலைநிற்றல்.
6.
நீங்கற் கரிய பரிவுட னேநின்ற நேரிழையீர்
ஈங்கற் புதக்கச் சிளநீரை நீரின் றெமக்களித்துத்
தாங்கற் கரிய விரகா னலத்தைத் தணித்திடுமே.

முன்னிலையாக்கல்.
7.
தொழுதா யிரந்திரு நாமங்க ளோதிடுந் தொண்டரைச்சேர்
பழுதாறு நீக்குங் கலைசைத் தியாகர் பருப்பதத்திப்
பொழுதாயத் தோடலர் குற்றாட லின்றிப் புரிகுழலீர்
எழுதாத சித்திரம் போனிற்ற லென்னை யியம்புமினே.

வண்டோச்சி மருங்கணைதல்.
8.
செம்பார் களிம்பெனச் சிற்றுயிர் தோறுஞ் செறிந்தமல
வெம்பாசந் தீர்க்குங் கலைசைத் தியாகர்தம் வெற்பிலிம்மான்
வம்பாருங் கொம்ப ரிடையரை நீவிர் வருத்தஞ்செய்தே
ஐம்பால் குடியா விருந்தீ ரறனன் றளியருக்கே.

இதுவுமது.
9.
நீடுபொன் மாடக் கலைசைத் தியாகர் நெடுங்கிரிமேல்
வாடுலங் காநின்ற கண்மட மாதொரு மாத்திரையில்
நாடுமற் றல்கிடச் செய்தாறு கால்வள நன்றுபெற்றும்
ஊடுறு மாக்கள் குடியாவிக் கூழை யுவந்தனரே. [5]

மெய்தொட்டுப் பயிறல்.
10.
விடையாள ரெங்கள் கலைசைத் தியாகரை மேவுமருள்
நடையார் பெறுநற் றவப்பயன் போல நறுநுதலாள்
இடையாமந் நூல்கொண் டிசைத்தோதி யத்தமெய் யெய்தப்பெற்றுக்
கிடையாப் பதங்களு நேரேகைக் கொள்ளக் கிடைத்ததுவே. [6]

பொய் பாராட்டல்.
11.
பலரைப் புணர்ந்த விருட்பாவை நீத்தருள் பார்ப்பதிகா
தலரைக் கலைசைத் தியாகேச ரைத்தணந் தாரிற்றெய்வ
மலரைப் பழித்த வடியீர்நுங் கண்ணுக்கொவ் வாமையன்றோ
அலரைப் பொருந்தி வெறிகொண்டு வண்டிங் கலைகின்றதே. [7]

இடம்பெற்றுத்தழால்.
12.
சேகாந் தருக்கள் புறஞ்சூழ் கலைசைத் தியாகர் வெற்பில்
நீகாந்தங் கண்ட விரும்பென்ன வீர்த்தென்னை நிற்கையினால்
ஏகாந்தமான விடமிஃ தன்றிமற் றில்லைநல்லாய்
யோகாந்தமான சுகமாரு தற்கிடை யூறில்லையே. [8]

வழிபாடு மறுத்தல்.
13.
தளவேந்தர் வாழுங் கலைசைத் தியாகர் தரணியிற்குந்
தளவேரி யந்தொடை தாழவென் னாணமுன் றன்னிடத்தே
தளவேய்ந் தனனிறை கற்புற் றவர்க்கொரு தாழ்வுளதோ
தளவே யொதுங்கத் தனியிடந் தாதமி யேன்றனக்கே. [9]

இடையூறு கிளத்தல்.
14.
நடங்காட்டு மெங்கள் சிதம்பர வீசர் நளினமலர்த்
தடங்காட்டுந் தொட்டிக் கலையனை யீரமிர் தத்தைமுத்து
வடங்காட் டியதன மந்தரங் காட்டிமை தீட்டுகண்கள்
விடங்காட்டு மத்தியென் றோமறைத் தீரிரு மென்கைகொண்டே. [10]

இதுவுமது.
15.
செண்டாடு மால்விடை யூருங் கலைசைத் தியாகர்வெற்பில்
கண்டாடு மின்சொற் கனியித ழீர்கடங் காட்டிநிரை
வண்டாடுங் கையிற்கண் வையம் படைத்திட்ட வல்லபத்தால்
கொண்டாடு மும்மை விதியென்று கூறிக் குவலயமே. [11]

நீடுநினைந்திரங்கல்.
16.
வாது வராலொடு செய்பதத் தீரகழ் வாய்நின்றும்பல்
வாதுவ ரீர்க்குங் கலைசைத் தியாகர் வரையினிலோ
வாது வருத்து மலரம்பி னானையும் வாட்டங்கண்டு
வாதுவர் வாயமிர் தந்துவ்வென் றென்று வழங்குவதே. [12]

மறுத்தெதிர்கோடல்.
17.
வீணைக் கரத்தர் கலைசைத் தியாகர் விதித்தவருள்
ஆணைக் கடங்குமல் லாதுநம் மன்பர்தம் மாசையென்னும்
கோணைக் களிறு மதமிகுந் தாலச்சங் கொள்ளையிட்டென்
நாணைக் கவளங்கொள் ளாமல் விடாதினி நன்னெஞ்சமே. [13]

வறிதுநகைதோற்றல்.
18.
தொகைக்கிடந் தந்தவென் சஞ்சிதக் குன்றறத் தூளிசெய்து
வகைக்கிடந் தந்த கலைசைத் தியாகரை வாழ்த்தலின்றிப்
பகைக்கிடந் தந்தவ ரிற்றென்ன நாணறல் பார்த்தென்செய்வாய்
நகைகிடந் தந்த தினியார்க்கு நல்கு நகைக்கிடமே. [14]

முறுவற்குறிப்புணர்தல்.
19.
சிற்பத்திற் செய்தபொன் மாடக் கலைசைத் தியாகர்வெற்பில்
கற்பத்தின் மேவிய காரிகை யார்மெச்சுங் காரிகையார்
நற்பத்தி யாரங்கொள் பாலிகை சேர்தொண்டை நாட்டணிவாய்
உற்பத்தி யான நிலாவுள்ள மேநம்மை யுய்விக்குமே. 15

முயங்குதலுறுத்தல்
20.
செறியும் பசும்பொழில் சூழ்தென் கலைசையிற் செங்கைமழு
மறியுஞ் சுமந்த சிதம்பர வீசர் வரைமின்மெய்யாம்
முறியுந் தனங்களுந் தானே தான்முறை யென்றளிக்கக்
குறியுங் குணங்களு நான்கண்டு தோய்தரக் கூடியதே. 16

புணர்ச்சியின் மகிழ்தல்.
21.
சீரின் பரப்புடை யார்வாழ் கலைசைத் தியாகர்வெற்பில்
பாரின்பஞ் சிற்றின்ப மென்பா ரவரவர் பக்குவத்தால்
ஓரின்ப விம்ப விவளித ழூறலை யுற்றருந்தப்
பேரின்ப மாகப்பெற் றேனினி யேதொரு பேரின்பமே. 17

புகழ்தல்.
22.
தேவாதி தேவர் கலைசைத் தியாகர் சிலம்பின்மின்னார்
மாவார் படலையங் கூந்தற் குடைந்து மருவுகொன்றை
தாவாத கொம்பெனுங் கையா லடியுறை தன்றலையில்
பூவாய செம்பொன் சொரிந்துகண் மாரிபொழிகின்றதே 18

ஏற்புறவணிதல்.
23.
சிங்கம் பிடிக்கக் கலையுஞ்செங் காந்தளிற் றெய்வவண்டும்
தங்கமென் சூதுக்கு வம்பையுங் காருக்குத் தாரையுஞ்சேர்த்
தங்கங் களுக்கணி யங்கங் கணிந்தன னங்கனையாய்
பங்கங்க டீர்க்குங் கலைசைத் தியாகர் பணியென்னவே. 19

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.