LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

ஜைனர்களின் தமிழ்ப்பணி

 

9ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழிற் செய்யுள் வளம் மிக்க செழிப்புறக் காரணமாயிருந்தவர்கள் பெரும்பாலும் ஜைனர்களென்றே கூறவேண்டும். இவர்களே இலக்கிய இலக்கண உணர்ச்சியில் தலைநின்றவர்கள். வடமொழி, பிராகிருதம் முதலிய மொழிகளில் சிறந்த பயிற்சியுடையவர்கள்; கல்வித் துறைகள் பலவற்றிலும் மேம்பட்டு நின்றவர்கள்; கல்வியின் பொருட்டும் சமயத்தின் பொருட்டும் தங்களை முற்றும் அர்ப்பணம் செய்தவர்கள்; பல பிரதேசங்களுக்கும் சென்று அங்கங்கே கல்வியறிவையும் சமயவுணர்ச்சியையும் பரப்பியவர்கள். இவர்களுடைய பரந்த மொழியுணர்ச்சியும் இலக்கிய அறிவும் தமிழ் மொழிக்குப் பெரிதும் பயன்பட்டன.
புதுப்புதுச் செய்யுள் வகைகள் இயற்றித் தமிழை வளப்படுத்தினர். யாப்பருங்கலத்தில் வரும் மேற்கோட் செய்யுட்கள் நான் கூறியதற்குச் சான்றாகும். தமிழின் இனிமைத்தத்துவத்தை இவர்கள் நன்குணர்ந்து, அது சிறந்து புலப்படும் செய்யுட்கள் அமைத்தார்கள். இவர்கள் தமிழோசையை அனுபவித்த முறையில், தமிழ் என்ற சொல்லிற்கே இனிமை என்ற புதுப்பொருள் பிறந்துவிட்டது.
இக்காலப் பகுதியிலே ஜைனர்களுடைய மொழியாற்றல் புலப்படுவதற்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலக்கியத்தைக் கலையாக எத்தனையளவு போற்றினாலும் தங்கள் சமயத்தைப் புறக்கணிக்க முடியுமா? முடியாது. ஆகவே, தங்கள் சமயத்திற்குரிய கதைப் பொருள்கள் நிரம்ப வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது. முக்கியமாக, கதாரூபமான பொருள்களே தங்கள் கவிதையாற்றலுக்கும், மக்களை இன்புறுத்துதற்கும் வேண்டப்பட்டன.
தங்கள் சமயத்தில் அருசு பதவியடைந்தோர்களாகிய தீர்த்தங்கரர்களது சரித்திரங்கள் அறிவூட்டுவன என்றும், புண்ணியம் பயப்பன என்றும், இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை விளைவிப்பன என்றும் இவர்கள் கருதியது வியப்பாகுமா? இச்சரித்திரங்கள் அனைத்தும் ஒரு சேர வடமொழியில் எழுதி முற்றிய காலம் கி.பி. 897 ஆகும். நூலின் பெயர் மஹாபுராணம் என்பது. தங்கள் மனத்திற்குகந்த இச்சரித்திரப் பொருள்களை அழகுணர்ச்சி தோன்ற இனிமை கனியும்படி செய்யுட்களாகப்பாடி வெளி யிடும் முயற்சிகளை மேற்கொண்டனர். இம் முயற்சியின் முதலாவது விளைவு சீவக சிந்தாமணி ஆகும்.
இப்பெருங்காப்பியத்தின் காலம் கி.பி. 900-ன் பின் என்பது உறுதி. வடமொழி மஹா புராணத்தை எழுதி முற்றுவித்தவர்கள் ஜீனசேனாச்சாரியரும், குணபத்திர முனிவரும் ஆவார்கள். குணபத்திரருக்குப்பின், குமரசேனரென்று ஒருவரும் அவருக்குப் பின் சிந்தாமணியாச்சாரியரும், பின்னர் ஸ்ரீவர்த்த தேவரும் இருந்தனர். இவர்கள் திரமிள சங்கத்தைச் சார்ந்தவர்கள்.
சிந்தாமணி ஆச்சாரியரையடுத்து ஸ்ரீவர்த்த தேவர் வைக்கப்பட்டுள்ளார். இவர், தேவர் புலவர்கட்கெல்லாம் ஒரு தலைச் சூடாமணி போன்றுள்ளார் என்று போற்றப்படுகிறார்.
இவ்வாறு சிந்தாமணியையும் சூளாமணியையும் அடுத்தடுத்துக் கூறுவதனாலும், இரண்டும் காவியங்களாதலினாலும், இரண்டும் ஜைன சமயத்திற்குரியனவாதலினா லும், இவைகளை இயற்றியவர்கள் திரமிள சங்கத்தாராயிருத்தலினாலும், இவைகள் தமிழ்க் காவியங்களே யாதல் வேண்டும். இவற்றை எழுதிய ஆசாரியர்கள் மஹா புரா ணத்திற்குப் பிற்காலத்தவர்கள் என்பதும் மேலே கூறப்பட்டது.
சிந்தாமணியின் உரைச் சிறப்புப் பாயிரத்தில்,
வையகம் புகழ்ந்து மணிமுடி சூட்டிய
பொய்யில் வான்கதை பொதிந்த செந்தமிழ்ச்
சிந்தா மணியைத் தெண்கடல் மாநிலம்
வந்தா தரிப்ப வண்பெரு வஞ்சிப்
பொய்யா மொழிபுகழ் மையறு காட்சித்
திருத்தகு முனிவன் கருத்திது வென்ன
என வருகின்றது. இதிலே கூறப்பட்ட ‘பொய்யாமொழி’ கங்க ராஜ்யத்தை, கி.பி. 908 முதல் 950 வரை ஆட்சிபுரிந்தவனாகிய ‘சத்திய வாக்கிய கொங்குணி வர்ம பூதுகப் பெருமானடி’ என்பவன். கங்கர்களிற் பலர் ஜைன மதாபிமானிகள். சிந்தாமணியை உலகம் போற்றுமாறு வஞ்சி நகர்ப் பொய்யா மொழி என்பவன் புகழ்ந்த ‘திருத்தக்க தேவன்’ என வருதலால் திருத்தக்க தேவரும் பொய்யாமொழியும் ஒரு காலத்தவர். எனவே, சிந்தாமணி என்ற காவியம் 10ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுமார் 930-ல் தோன்றிய தாதல் வேண்டும். சூளாமணி என்ற காவிய மும் சுமார் கி.பி. 950-ல் இயற்றப்பட்டதென்று துணிதல் தகும்.
பணிதந் தலகில் பராவெடுத்துச் சிந்தா
மணிதந்த சூளாமணியால் (கண்ணி. 186)
என்ற இராசராசனுலாவும் சிந்தாமணியை அடுத்துச் சூளாமணி தோன்றியதெனலைக் குறிப்பிடுகின்றது.
சிந்தாமணியைத் திருத்தக்க தேவரும் சூளாமணியைத் தோலா மொழித்தேவரும் இயற்றியவர் என்றல் பிரசித்தம். ‘மேலே காட்டிய ஸ்லோகங்களிலே இக்காவியங்களை முறையே சிந்தாமணி முனிவரும் ஸ்ரீவர்த்த தேவராகிய சூடாமணியும் இயற்றினர் என்று காணப்படுகின்றதே! இங்ஙனமிருப்ப, அச்சுலோகங்களிற் குறித்த காவியங்கள் தமிழ்க் காவியங்கள் ஆதல் எப்படி?’ என்று சிலர் ஐயுறவு கொள்ளலாம். இக்காவியங் களை இயற்றிய பின்னர், இவற்றின் பெயர்களால் ஆசிரியர்கள் இங்கே குறிக்கப்பட்டனர் என்று கொள்ளுதல் தக்க விடையாகும்.

9ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழிற் செய்யுள் வளம் மிக்க செழிப்புறக் காரணமாயிருந்தவர்கள் பெரும்பாலும் ஜைனர்களென்றே கூறவேண்டும். இவர்களே இலக்கிய இலக்கண உணர்ச்சியில் தலைநின்றவர்கள். வடமொழி, பிராகிருதம் முதலிய மொழிகளில் சிறந்த பயிற்சியுடையவர்கள்; கல்வித் துறைகள் பலவற்றிலும் மேம்பட்டு நின்றவர்கள்; கல்வியின் பொருட்டும் சமயத்தின் பொருட்டும் தங்களை முற்றும் அர்ப்பணம் செய்தவர்கள்; பல பிரதேசங்களுக்கும் சென்று அங்கங்கே கல்வியறிவையும் சமயவுணர்ச்சியையும் பரப்பியவர்கள். இவர்களுடைய பரந்த மொழியுணர்ச்சியும் இலக்கிய அறிவும் தமிழ் மொழிக்குப் பெரிதும் பயன்பட்டன.

 

 

புதுப்புதுச் செய்யுள் வகைகள் இயற்றித் தமிழை வளப்படுத்தினர். யாப்பருங்கலத்தில் வரும் மேற்கோட் செய்யுட்கள் நான் கூறியதற்குச் சான்றாகும். தமிழின் இனிமைத்தத்துவத்தை இவர்கள் நன்குணர்ந்து, அது சிறந்து புலப்படும் செய்யுட்கள் அமைத்தார்கள். இவர்கள் தமிழோசையை அனுபவித்த முறையில், தமிழ் என்ற சொல்லிற்கே இனிமை என்ற புதுப்பொருள் பிறந்துவிட்டது.

 

இக்காலப் பகுதியிலே ஜைனர்களுடைய மொழியாற்றல் புலப்படுவதற்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலக்கியத்தைக் கலையாக எத்தனையளவு போற்றினாலும் தங்கள் சமயத்தைப் புறக்கணிக்க முடியுமா? முடியாது. ஆகவே, தங்கள் சமயத்திற்குரிய கதைப் பொருள்கள் நிரம்ப வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது. முக்கியமாக, கதாரூபமான பொருள்களே தங்கள் கவிதையாற்றலுக்கும், மக்களை இன்புறுத்துதற்கும் வேண்டப்பட்டன.

 

தங்கள் சமயத்தில் அருசு பதவியடைந்தோர்களாகிய தீர்த்தங்கரர்களது சரித்திரங்கள் அறிவூட்டுவன என்றும், புண்ணியம் பயப்பன என்றும், இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை விளைவிப்பன என்றும் இவர்கள் கருதியது வியப்பாகுமா? இச்சரித்திரங்கள் அனைத்தும் ஒரு சேர வடமொழியில் எழுதி முற்றிய காலம் கி.பி. 897 ஆகும். நூலின் பெயர் மஹாபுராணம் என்பது. தங்கள் மனத்திற்குகந்த இச்சரித்திரப் பொருள்களை அழகுணர்ச்சி தோன்ற இனிமை கனியும்படி செய்யுட்களாகப்பாடி வெளி யிடும் முயற்சிகளை மேற்கொண்டனர். இம் முயற்சியின் முதலாவது விளைவு சீவக சிந்தாமணி ஆகும்.

 

இப்பெருங்காப்பியத்தின் காலம் கி.பி. 900-ன் பின் என்பது உறுதி. வடமொழி மஹா புராணத்தை எழுதி முற்றுவித்தவர்கள் ஜீனசேனாச்சாரியரும், குணபத்திர முனிவரும் ஆவார்கள். குணபத்திரருக்குப்பின், குமரசேனரென்று ஒருவரும் அவருக்குப் பின் சிந்தாமணியாச்சாரியரும், பின்னர் ஸ்ரீவர்த்த தேவரும் இருந்தனர். இவர்கள் திரமிள சங்கத்தைச் சார்ந்தவர்கள்.

 

சிந்தாமணி ஆச்சாரியரையடுத்து ஸ்ரீவர்த்த தேவர் வைக்கப்பட்டுள்ளார். இவர், தேவர் புலவர்கட்கெல்லாம் ஒரு தலைச் சூடாமணி போன்றுள்ளார் என்று போற்றப்படுகிறார்.

 

இவ்வாறு சிந்தாமணியையும் சூளாமணியையும் அடுத்தடுத்துக் கூறுவதனாலும், இரண்டும் காவியங்களாதலினாலும், இரண்டும் ஜைன சமயத்திற்குரியனவாதலினா லும், இவைகளை இயற்றியவர்கள் திரமிள சங்கத்தாராயிருத்தலினாலும், இவைகள் தமிழ்க் காவியங்களே யாதல் வேண்டும். இவற்றை எழுதிய ஆசாரியர்கள் மஹா புரா ணத்திற்குப் பிற்காலத்தவர்கள் என்பதும் மேலே கூறப்பட்டது.

 

சிந்தாமணியின் உரைச் சிறப்புப் பாயிரத்தில்,

 

வையகம் புகழ்ந்து மணிமுடி சூட்டிய

 

பொய்யில் வான்கதை பொதிந்த செந்தமிழ்ச்

 

சிந்தா மணியைத் தெண்கடல் மாநிலம்

 

வந்தா தரிப்ப வண்பெரு வஞ்சிப்

 

பொய்யா மொழிபுகழ் மையறு காட்சித்

 

திருத்தகு முனிவன் கருத்திது வென்ன

 

என வருகின்றது. இதிலே கூறப்பட்ட ‘பொய்யாமொழி’ கங்க ராஜ்யத்தை, கி.பி. 908 முதல் 950 வரை ஆட்சிபுரிந்தவனாகிய ‘சத்திய வாக்கிய கொங்குணி வர்ம பூதுகப் பெருமானடி’ என்பவன். கங்கர்களிற் பலர் ஜைன மதாபிமானிகள். சிந்தாமணியை உலகம் போற்றுமாறு வஞ்சி நகர்ப் பொய்யா மொழி என்பவன் புகழ்ந்த ‘திருத்தக்க தேவன்’ என வருதலால் திருத்தக்க தேவரும் பொய்யாமொழியும் ஒரு காலத்தவர். எனவே, சிந்தாமணி என்ற காவியம் 10ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுமார் 930-ல் தோன்றிய தாதல் வேண்டும். சூளாமணி என்ற காவிய மும் சுமார் கி.பி. 950-ல் இயற்றப்பட்டதென்று துணிதல் தகும்.

 

பணிதந் தலகில் பராவெடுத்துச் சிந்தா

 

மணிதந்த சூளாமணியால் (கண்ணி. 186)

 

என்ற இராசராசனுலாவும் சிந்தாமணியை அடுத்துச் சூளாமணி தோன்றியதெனலைக் குறிப்பிடுகின்றது.

 

சிந்தாமணியைத் திருத்தக்க தேவரும் சூளாமணியைத் தோலா மொழித்தேவரும் இயற்றியவர் என்றல் பிரசித்தம். ‘மேலே காட்டிய ஸ்லோகங்களிலே இக்காவியங்களை முறையே சிந்தாமணி முனிவரும் ஸ்ரீவர்த்த தேவராகிய சூடாமணியும் இயற்றினர் என்று காணப்படுகின்றதே! இங்ஙனமிருப்ப, அச்சுலோகங்களிற் குறித்த காவியங்கள் தமிழ்க் காவியங்கள் ஆதல் எப்படி?’ என்று சிலர் ஐயுறவு கொள்ளலாம். இக்காவியங் களை இயற்றிய பின்னர், இவற்றின் பெயர்களால் ஆசிரியர்கள் இங்கே குறிக்கப்பட்டனர் என்று கொள்ளுதல் தக்க விடையாகும்.

 

by Swathi   on 11 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.