LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

சல்லிக்கட்டு

சல்லிக்கட்டு ஒரு புள்ளிக்கட்டில்  துவங்கி

 

அள்ளிக்கட்டாய் ஆக்கப்பட்ட ஒரு கில்லிகட்டு.

 

தலைவர் பல கண்டினும் இலக்கு ஒன்றென 

 

அலையார்ப்பரித்த வங்கக்கடல் மாணாக்கர்,

 

இளைஞர் பேராழியால் சுருங்கிப்போனதே!

 

அரசியல்வாந்திகள் அச்சத்தால் ஒடுங்கின.

 

அரசுஇயந்திரமும் அச்சுமுறிந்து முடங்கின. 

 

திரை அரங்கிலும், பெருங்கடையிலும்,

 

அறை கணினியிலும், சிறை கைபேசியுமே

 

கதியென கிடந்தவர்; நிறை தலைமையுடன்

 

மதியொத்து மனமொத்து உணர்வுரைத்தனரே!.

 

முள்ளிவாய்க்காலெனும் புள்ளியில் துவங்கி,

 

முல்லை பெரியார், மீத்தேன், கெயில் என

 

காவிரியாய் விரிந்துததுவே - நாதியற்ற

 

பாவியாய், வக்கற்ற சாதியாய் பூமகளின் தலைமகன்.

 

எதற்கும்  முன்னோடி எம்மக்கள் மிகையன்றே,

 

இதற்கும் வழிகாட்டி   என்றால் குறையன்றோ? 

 

அதற்கும் எட்டப்பன் இங்குண்டு என்றொருவன்,

 

 அரசியல்விஷஞானம் புகுத்திட்டான் மறைந்திட்டே.

 

வெற்றி  உரைக்க ஏற்பில்லா சிறுகூட்டம்

 

பற்றி வைக்கவே பதராய்  முளைத்ததுவும்,

 

மொழியின் கோபமாய், இனத்தின் சாபமாய்,

 

வழியில் தடை  இதையும் தாண்டி செல்வோம்!

 

உயிரில் பலவாயினும் உணர்வில் ஒன்றாகி

 

உலகிற்கே உரைத்திட்டார்  தமிழர்  பெருமை மீட்டிட்டார்

 

வீரம் மங்கவில்லை. புறநானுறும் மறக்கவில்லை.

 

திறம் பொங்கும் வெற்றி  எம்தமிழர்க்கே  உரித்தாகும்.

 

வாழ்க தாய் தமிழ் வாழிய எம்மக்கள்.

JALLIKATTU
by D.Krishnamurthy   on 26 Jan 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.