|
|||||
அன்புள்ள மாணவ செல்வங்களே... இளைஞர்களே... |
|||||
அன்புள்ள மாணவ செல்வங்களே, இளைஞர்களே, தமிழ்ச் சமூகத்தை மாற்றி அமைத்த எனது அருமை சகோதர சகோதரிகளே !
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்னும் தமிழ் முதுமொழிக்கேற்ப, உங்களின் "தமிழ் மரபுப் புரட்சி" மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இது உங்களுக்குத் தொடக்கம் தான், இன்னும் நீங்கள் நிறையச் சாதிக்கவேண்டியுள்ளது. உண்மையைச் சொல்லப்போனால் உங்களை மட்டுமே நம்பித்தான் அடுத்த தலைமுறை உலக தமிழ் சமூகம் இருக்கின்றது. இந்தப் புரட்சியின் மூலம் நீங்கள் சாதித்தவை ஏராளம், அனைத்தையும் பட்டியலிட முடியாவிட்டாலும் சில இங்கே,
மொத்தத்தில், வள்ளுவமும் அகநானூறும் புறநானூறும் கலித்தொகையும் சிலப்பதிகாரமும் மற்றுமுள்ள அனைத்துத் தமிழும் எடுத்துரைக்க வந்த அனைத்தையும் உங்களின் நற்பண்பால் இந்த உலகுக்கு உதாரணத்துடன் காட்டினீர்கள். அதற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அதேபோல், அடுத்துவரும் உலகை மீண்டும் தமிழ் சமூகம் ஆளவேண்டுமானால், நீங்கள் செய்யவேண்டியது இரண்டே இரண்டு தான். ஏனெனில் இந்த இரண்டும் தான் ஆளுவதற்குத் தேவை என்பதை நாம் கற்றுக்கொண்ட பாடம்.
முதலில் பணம். ஆம், அறிவழியில் பொருளீட்டுவோம் என்று மன உறுதியுடன் நீங்கள் ஒவ்வொருவரும் தொழில் முனைபவர்களாக மாறுங்கள். அதேபோல் நல்லவைகள் எங்கிருந்தாலும் தயங்காமல் ஏற்றுக்கொண்டு, நமது அடிப்படையை விட்டு விலகாமல் எந்தத் தொழில் செய்தாலும் அதில் தமிழ் மரபு, கலை, பண்பாடு, சித்த மருத்துவம், விவசாயம் தொடர்பாகவும், இயற்கையைப் பாதுகாப்பதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்து அதிகாரம். நீங்கள் தற்சார்புடைய அதிகாரத்துடன் இருந்தால் மட்டுமே உலகை நன் முறையில் வழிநடத்திச்செல்ல முடியும். அன்பும் அமைதியும் பொறுமையும் நுண்ணறிவும் தேவையானநேரத்தில் விட்டுக்கொடுத்தும் தொண்டாற்றியும் மன உறுதியுடனும் முன்னேறுங்கள். வருங்காலம் உங்கள் கையில். அமைதியான பசுமை உலகம் படையுங்கள். வாழ்க தமிழ், வாழ்க பாரதம்.
-யோகி ராஜாபாபு |
|||||
by Swathi on 24 Jan 2017 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|