ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள லாரோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் சோதனை நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து துப்பாக்கிச்சண்டை முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல் இல்லை. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.
|