LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் - இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலி !!

ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 

ஜம்மு காஷ்மீரில் உள்ள, ஆர்.எஸ் புரா, ராம்கார், செனாஸ், அக்னூர் மற்றும் பர்க்வால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். செனாஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்தியா ராணுவ வீரர் ஒருவர் பலியானார். மேலும் 6 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். சிறிய ரக ராக்கெட்டுகள், கையெறி குண்டுகளை வீசி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து, அரினா பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே காஷ்மீர் பகுதிக்கு சென்றுள்ள போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.   

by Swathi   on 22 Oct 2013  0 Comments
Tags: இந்திய ராணுவம்   பாகிஸ்தான் ராணுவம்   ஜம்மு காஷ்மீர்   பாகிஸ்தான் அத்துமீறல்   ஒரு வீரர் பலி   Jammu Kashmir   Jammu Attack  
 தொடர்புடையவை-Related Articles
ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் - இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலி !! ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் - இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலி !!
தீவிரவாத ஊடுருவல்களை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானங்கள் வாங்க இந்திய ராணுவம் டெண்டர் !! தீவிரவாத ஊடுருவல்களை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானங்கள் வாங்க இந்திய ராணுவம் டெண்டர் !!
எல்லை பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை !!! எல்லை பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.