|
|||||
உலகத் தமிழர் பொருளாதார மாநாடு டிசம்பர் 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது... |
|||||
ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, டிசம்பர் 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளரும் தலைவருமான டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் கூறியதாவது: உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, 2009ல் துவங்கி, பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஐந்து மாநாடுகள் அந்தந்த நகரத்துடன் இணைந்து உச்சி மாநாடாகவும் நடத்தப்பட்டது. ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு டிசம்பர் 28 முதல் 30 தேதி வரை மூன்று நாட்கள் சென்னை, லீ மெரிடியன் நட்சத்திர விடுதியில் நடந்தது. இந்த மாநாட்டில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத், தமிழகத் தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் உட்படப் பலர் இந்தியாவிலிருந்தும் , உலக நாடுகளிலிருந்தும் பங்கேற்கிறார்கள். இம்மாநாட்டில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் , அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள், வணிகர்கள், பங்கேற்கின்றனர். மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று விருதுகள் வழங்குகிறார். இம்மாநாட்டில் தெலுங்கானா கவர்னர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். இம்மாநாடு வணிகம் பெருகவும், முதலீடுகளை ஈர்க்கவும் நடைபெற்றது. மொரீசியர் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். பரமசிவம் பிள்ளை வையாபுரி, தென்னாப்பிரிக்காவின் அமைச்சர் திரு.இரவிப்பிள்ளை , நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெகத் ரட்சகன் , இந்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் திரு.டி .எஸ்.திருமூர்த்தி , லீ மெரிடியன் தலைவர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி , அயல்நாட்டுத் தூதுவர் திரு.ப.மகாலிங்கம் , டாக்டர் ஆர்.சீத்தாராமன் (தலைவர்,தோகா வங்கி) , திரு.வள்ளிநாயகம் உள்ளிட்ட பல நீதிபதிகள் என்று பல துறை சார்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் 130க்கும் மேற்பட்ட உரைகள் இடம்பெற்றன. பல்வேறு துறையினரும் தங்களுக்குள் தொழில் முதலீடுகள், வணிகத்தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள மிகப்பெரிய வாய்ப்பாக இம்மாநாடு அமைந்தது. |
|||||
by Swathi on 21 Jan 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|