|
|||||
நாவலாசிரியரும் சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளருமான திரு. டி.செல்வராஜ் மறைவுக்கு வலைத்தமிழ் அஞ்சலி செலுத்துகிறது... |
|||||
எழுத்தாளர் திரு. டி. செல்வராஜ் அவர்கள் ஓர் முற்போக்குத் தமிழ் எழுத்தாளரும் வழக்கறிஞரும் ஆவார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். இவர் நெல்லை தென்கலம் சிற்றூரைச் சேர்ந்த செல்வராஜ் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பல்வேறு சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதியுள்ள இவருக்கு திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை விவரிக்கும் தோல் என்ற படைப்பிற்காக 2012ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. 1975-இல் செம்மலர் எழுத்தாளர்கள் 32 பேர்கூடி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்கிற அமைப்பைத் தொடங்கியபோது அதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் .இவர் பொதுவுடமைக்கொள்கையில் பிடிப்புடையவர். அவருடைய முதல் நாவலான “மலரும் சருகும்” நெல்லை வட்டாரத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் விவசாய வாழ்க்கையையும், அன்று அம்மக்கள் நடத்திய ‘முத்திரை மரக்கால்’ போராட்டத்தையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் மையமாகக் கொண்ட தேநீர் நாவல் அவரது அடுத்த முக்கியமான படைப்பாகும்.ஊமை ஜனங்கள் என்கிற பேரில் அக்கதை திரைப்படமாகவும் வெளிவந்தது.செம்மலரில் தொடராக வந்த “மூலதனம்” நாவல் உலகமயக் காலத்தில் முதலாளித்துவம் பற்றிய படைப்பு. திண்டுக்கல்லில் 40 களில் கம்யூனிஸ்ட்கள் தலைமையில் நடத்தப்பட்ட தோல் பதனிடும் தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றை “தோல்” என்ற நாவலாகப் படைத்தளித்தார்.அதற்கு 2012 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 200க்கும் மேற்பட்டசிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவை, "நோன்பு" உள்ளிட்ட சில தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
இவர் 6 நாவல்கள் எழுதியுள்ளார். மலரும் சருகும் - திருநெல்வேலியில் விவசாயிகளின் போராட்டத்தை மையமாகக் கொண்டது , தேநீர் -தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைப் பின்னணியாகக் கொண்டது, இது திரைப்படமாகவும் வந்துள்ளது. மூலதனம் -நெருக்கடிநிலைக் காலத்தைப் பின்னணியாகக்கொண்டது , தோல் -தமிழ்நாடு அரசின் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாகத் தேர்வு செய்யப் பெற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் இவருக்குப் பரிசு வழங்கப் பெற்றது.
சமூக சிந்தனையாளர்களும், படைப்பாளிகளுக்கும் என்றுமே மறைவில்லை. அவர்களின் சிந்தனைகளும், படைப்புகளும் இந்தச் சமூகத்தின் பயன்பாட்டில் உள்ளவரை அவர்கள் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
அன்னாரின் மறைவிற்கு வலைத்தமிழ் வாசகர்கள் சார்பாக அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறோம். |
|||||
by Swathi on 21 Jan 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|