|
|||||
டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் சிந்தனையை ஒட்டி நல்லோர் வட்டத்தின் ஒருங்கிணைப்பில் பல மாவட்டங்களிலிருந்து திரட்டு வந்து கலந்துகொண்ட மாணிக்கமாணவர்கள் கருத்தரங்கு |
|||||
தமிழகம் முழுவதும் நல்லோர் வட்டத்தின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணிக்கம் மாணவர்கள் தமிழக அளவில் அனைத்து மாணவர்களும் நேற்று சென்னையில் ஒரு நாள் முகாமில் கலந்து கொண்டனர். விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் D விஸ்வநாதன் அவர்கள் காலை 10.00 மணிக்கு வருகைதந்து மாணிக்க மாணவர்களின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு மாலை 4.00 மணிக்கு விழா முடியும்வரை முழுமையாகக் கலந்து கொண்டார். "மாணவர்களின் ஈடுபாடும், நிகழ்ச்சிகளின் கட்டுப்பாடும் புதுமையானதாக இதுவரை இப்படிப் பார்த்ததில்லை "என்றார். மேலும் அவர் பேசும்போது " அப்துல் கலாம் அவர்களுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மாணவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் .அந்த நம்பிக்கையை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு நல்லோர் வட்டத்துடன் இணைந்து உங்களுக்கு உதவ எப்போதும் தயாராகவுள்ளேன் " என்றார். மதிய உணவுக்குப்பிறகு மாணவர்கள் மாவட்டவாரியாகச் சந்தித்து, தமது மாவட்டங்களில் வாரந்தோறும் மாதந்தோறும் சந்தித்து ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப்பணிகளில் செயல்பட முடிவுசெய்தனர். விழாவில் திருச்சி பனானாலீஃப் ஹோட்டல் உரிமையாளரும் நல்லோர்வட்டத்தின் திருச்சி மாவட்டப் பொறுப்பாளருமான உயர்திரு மனோகரன் அவர்கள் பேசும்போது " பிறருடைய சிறிய நல்லசெயலையும் பாராட்டும் ஒரு நற்பண்பைத் தமிழகக் கலாச்சாரமாக மாற்ற நான் பொறுப்பேற்கிறேன் " என்றார். |
|||||
by Swathi on 21 Jan 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|