LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஐரோப்பிய தமிழர்கள் தினத்தையொட்டி, ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள ‘லிண்டன்’ அரசு அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் இரண்டு 2 ஐம்பொன் சிலைகள் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் நிறுவப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பிரெடரிக் காமரர், கார்ல் கிரவுல் ஆகியோரால் ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் மற்றும் தமிழக ஆய்வாளர் கவுதம சன்னா எழுதிய ‘திருவள்ளுவர் யார் - கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்’ என்னும் புத்தகமும், தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் கதிரவன் உருவாக்கிய குழந்தைகளுக்கான திருக்குறள் மென்பொருளும், விழா மலரும் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ‘லிண்டன்’ அருங்காட்சியக இயக்குநர் இனெஸ் டி கெஸ்ட்ரோ, தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் க.சுபாஷிணி, எழுத்தாளர் கவுதம சன்னா உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.

தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் முனைவர்.க.சுபாஷிணி ஐரோப்பா/ஜெர்மனியில் திருக்குறளின் தாக்கம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் மேலும் இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை விளக்கிப் பேசினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், இந்தியப் பாராளுமன்ற உறுப்பினருமான திருமிகு தொல். திருமாவளவன், சாதி, இனம், மதம் கடந்த ஒரு பொது மறையான திருக்குறள் தமிழ் உலகின் பெருமை என்பதை வலியுறுத்திச் சிறப்புரை ஆற்றினார். திரு கவுதம சன்னா இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தியும்,  'திருவள்ளுவர் யார் - கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்' என்கிறதன் நூலில் உள்ள சிறப்பம்சங்களை விளக்கி கூறினார். திரு பாலச்சந்திரன் இ.ஆ.ப. (ஓய்வு) திருக்குறள் தொன்மையான இலக்கணமாக இருப்பினும் எக்காலத்திற்கும் பொருந்துமாறு வள்ளுவன் வடித்த சிந்தனைகள் பலவற்றை மேற்கொள் காட்டி, இந்தச் சிலைகளை இங்கு நிறுவுவதன் வாயிலாக தமிழர் சிந்தனை உலகறியச்செய்வதில் ஒரு முக்கிய பங்காற்றும் என வாழ்த்தினர். தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர் இந்நிகழ்விற்காக ஜெர்மனி வந்து இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

ஐரோப்பாவில் பிரான்ஸ், ஸ்வீடன், டென்மார்க், நோர்வே மற்றும் பல நாடுகளில் இருந்தும் வெவ்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், தமிழ் ஆர்வலர்களும்  இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

by Swathi   on 21 Jan 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.