திருக்குறள் வெளிவந்துள்ள பிறமொழி மொழிபெயர்ப்புகளைத் தொகுப்பதற்காகக் கடந்த ஆண்டு வலைத்தமிழ் ஒரு முயற்சி செய்தது. அதைத் தொடர்ந்து இவ்வாண்டு மீண்டும் திருக்குறள் ஆர்வலர், அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் வசிக்கும் திரு.இளங்கோ தங்கவேலு தலைமையில் திரு.சிவசுப்பிரமணியன் துரை - டெக்சஸ் , திரு.செந்தில்செல்வன் துரைசாமி, டெக்சஸ், திருமதி.கார்த்திகைப்பிரியா கோவிந்தராசன் - பாஸ்டன், திருமதி.ப்ரவீணா கண்ணன் - மிச்சிகன் ,திரு.உண்ணாமலை சுப்பையா - டெக்சஸ் ஆகியோர் கொண்ட குழு திருக்குறளில் இதுவரை வெளிவந்துள்ள ஒவ்வொரு மொழிபெயர்ப்பு விவரங்களையும் தொகுத்து அதன் ஒரு பிரதியைச் சென்னைக்கு வரவழைத்துத் தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்கள்.
திருக்குறள் மாநாடுகள் மற்றும் தமிழ் நிகழ்வுகளில் இந்தத் தொகுப்பைப் பயன்படுத்தவும், பிற மொழியினருடன் நட்பு பாராட்டும்போது அவர்கள் பேசும் மொழியில் திருக்குறளைப் பரிசளிக்கவும், பயன்படுத்தவும் முடியும் என்றும் நம்புகிறோம். உங்களிடம் திருக்குறள் பிறமொழி மொழிபெயர்ப்பு நூல்கள் இருந்தால் அதன் அட்டைப்படத்தையும், உள்ளே ஒரு பக்கத்தையும், அதன் ஆசிரியர், பதிப்பு, எங்கே கிடைக்கும் என்ற விவரங்களை உள்ளடக்கி info@valaitamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவவும். வலைத்தமிழ் திருக்குறள் பகுதியில் உங்கள் பெயரை, உங்கள் அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டு ஆவணப்படுத்தப்படும்.
|