LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

சனவரி மாத -ஆசிரியர் கடிதம்.

ஆசிரியர் பக்கம்

 டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் 2020ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று நினைத்தார்.   1-1-2020 இறுதி ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் இந்த ஒரு ஆண்டில் சில அடிப்படை வளர்ச்சி சிந்தனைகளை, செயல்பாடுகளை முன்னெடுக்கும் ஆண்டாக முன்னெடுக்க அனைவரும் முன்வரவேண்டும்.  இன்று இந்தியாவின் ஒரு சில கிராமங்கள் தன்னிறைவு பெற்று, முன்மாதிரியான கிராமங்களாக விளங்குவதை நாம் தொடர்ந்து செய்திகளில் பார்க்கிறோம். அது அந்தப் பஞ்சாயத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனி மனிதர்கள் , தனியார் அமைப்புகள்  உள்ளிட்டவற்றாலேயே சாத்தியமாகிறது. அவர்கள் செய்த அந்த மாற்றத்தை ஆவணப்படுத்தி அவற்றைப் பரவலாக்கும் உத்திகளை அறிந்து அவற்றை நடைமுறைப்படுத்துவது வளர்ச்சிக்கு வித்திடும்.  

தமிழ்நாட்டின் 12,620 பஞ்சாயத்துகளிலும்  பொறுப்பு மிக்க , சமூகத்திற்காக தன்னுடைய பங்களிப்பை வழங்க முன்வரும் இளைஞர்தான் இன்றைய  அவசியத் தேவை. அரசாங்கமோ , தனியார் நிறுவனங்களோ தமிழகத்தின் கல்விப்படிப்பு முடிந்து ஒவ்வொரு ஆண்டும் வரும் அனைவருக்கும் வேலை வழங்குவது சாத்தியமில்லை என்பது அனைவரும் அறிந்ததே.  

இந்நிலையில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துகளிலும் கிடைக்கும் வாய்ப்புகளை, வளங்களை முறைப்படுத்தி, தற்சார்பு பொருளாதாரத்தை  ஏற்படுத்துவதும், சிறு தொழில்களை புதிய சிந்தனைகளுடன் ஏற்படுத்தி வேலைவாய்ப்பை அதிகரிப்பதும் , உரிய பயிற்சிகள் கொடுப்பது, இதன்மூலம் வேலைவாய்ப்பை , கிராமப் பொருளாதாரத்தை உயர்த்துவது போன்றவை சாத்தியமாகும். 

மேலும் கிராமங்களின் கட்டமைப்புகள் வலுப்பெற ஒவ்வொரு கிராமத்தின் ஐந்து முக்கியத் தீர்க்கப்படவேண்டிய தேவைகளைத் தொகுத்து அதை இந்த ஓர் ஆண்டில் ஒவ்வொரு கிராமத்திலும் ஓரிரு மக்கள் பிரச்சினைகளை , தேவைகளைச் சரி செய்வது கிராமப்புறக் கட்டுமானத்திற்கு வலு சேர்க்கும். 

டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், டாக்டர்  எம்.எஸ்.உதயமூர்த்தி போன்றோர் மனித குலத்தின் வளர்ச்சி குறித்து, சிந்தித்த தலைவர்கள்.  அவர்கள் தன்னுடைய கருத்துகளைப் பின்பற்றத் தொண்டர்களை உருவாக்க எண்ணியதில்லை, அவர்கள் அவர்களை  ஈடுசெய்யும் தலைவர்களை உருவாக்கவே எண்ணினார்கள். எனவே, ஒவ்வொருவரும் தன்னை ஒரு டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமாக , டாக்டர்  எம்.எஸ்.உதயமூர்த்தியாக நினைத்து சமூக மாற்றத்திற்குத் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது அவசியமாகிறது. 

 

வாழ்க தமிழ்... 

மீண்டும் அடுத்த இதழில்  சந்திப்போம்.

by Swathi   on 20 Jan 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.