அம்புலி 3D படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மிரட்டிய ஹரி ஷங்கர், ஹரேஷ் நாரயண் கூட்டணி அடுத்ததாக 'ஆ' என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை மிரட்ட இருக்கிறார்களாம்.
இந்த படத்தில் வரும் ஐந்து திகில் கதைத் தொகுப்புகள் டோக்கியோ, துபாய், ஆந்திரப் பிரதேசத்தின் நெடுஞ்சாலை, ஏடிஎம் பூத், நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள பெர்முடா முக்கோணம் போன்ற இடங்களில் நடைபெறுவதாகக் காட்டப்படுகின்றது.
டோக்கியோ பற்றிய பிரிவில் உண்மையான ஜப்பானிய நடிகர்களையே நடிக்க வைத்துள்ளனர்.
திரையில் 20 நிமிடம் தோன்றும் இந்தக் காட்சிகளில் இந்த நடிகர்கள் ஜப்பானிய மொழியில் பேசியுள்ளனர்.
ஜப்பானிய படங்களில் தோன்றும் திகில் காட்சிகள் பயத்தைத் தருவதுடன் உணர்ச்சிகரமாகவும் இருக்கும். அதனை அப்படியே படம் பிடிக்க விரும்பியதால் தமிழில் இந்த வரிகளை தமிழில் டப் செய்யவில்லை. ஆனால் தமிழ் ரசிகர்களின் வசதிக்காக தமிழில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளோம் என படக்குழு வட்டாங்கள் தெரிவிக்கின்றன.
|