LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இந்த வருடம் பொங்கல் பரிசாக 500 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பை வழங்க தமிழக அரசு ஆலோசனை !!

வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு, தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 500 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பொங்கல் பை வழங்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  

 

கடந்த தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சர்க்கரை பொங்கல் தயாரிக்க தேவையான, பச்சரிசி, வெல்லம், தலா அரை கிலோ, பாசிபயறு, 100 கிராம், முந்திரி, ஏலம், திராட்சை, 20 கிராம் ஆகிய பொருட்கள் அடங்கிய, பொங்கல் பை, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், ரேஷன் கடை மூலமாக இலவசமாக வழங்கப்பட்டது. இதற்காக, 70 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, கடந்த பொங்கல் பண்டிகை அன்று, தலா 160 ரூபாய் மதிப்பிற்கு, பொங்கல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை அடங்கிய பையுடன், 100 ரூபாய் ரொக்கமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்காக, 300 கோடி ரூபாய் செலவானது. 

 

இந்நிலையில், இந்த முறை பொங்கல் பண்டிகைக்கு, ரொக்க தொகையை ரூ 500 யாக உயர்த்தி வழங்க, தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதனால், அரசுக்கு, 700800 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

by Swathi   on 10 Dec 2013  0 Comments
Tags: Pongal Parisu   Pongal Gift   Pongal Bag   பொங்கல் பை   பொங்கல் பரிசு   2014 பொங்கல்     
 தொடர்புடையவை-Related Articles
சின்னத்திரை தொலைகாட்சிகளில் பொங்கல் ஸ்பெஷல் திரைப்படங்கள் : ஆரம்பம், பாண்டியநாடு, தலைவா, ராஜா ராணி...... சின்னத்திரை தொலைகாட்சிகளில் பொங்கல் ஸ்பெஷல் திரைப்படங்கள் : ஆரம்பம், பாண்டியநாடு, தலைவா, ராஜா ராணி......
இந்த வருடம் பொங்கல் பரிசாக 500 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பை வழங்க தமிழக அரசு ஆலோசனை !! இந்த வருடம் பொங்கல் பரிசாக 500 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பை வழங்க தமிழக அரசு ஆலோசனை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.