|
|||||
ஜாதி கலவரத்தை தூண்டும் சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஜெயலலிதா எச்சரிக்கை ! |
|||||
தமிழகத்தில் ஜாதி கலவரத்தைத் தூண்டுவோர், பொது அமைதிக்கு ஊறு விளைவிப்போர் மீது காவல் துரையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் தமிழக முதல்வர்
ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
கடந்த 25ந்தேதி மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்புடைய வன்னியர் சங்கம் நடத்திய வன்னிய இளைஞர் பெருவிழாவையொட்டி மரக்காணத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம்
நேற்று சட்டப்பேரவையில் எதிரொலித்தது. தே.மு.தி.க, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இந்தப் சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தனர். இது குறித்து
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.குரு அவையில் பேசும்போது பா.ம.கவுக்கும் வன்முறைக்கும் சம்பந்தம் இல்லை என்றார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, தலித்
மக்களை வன்முறைக்குக் காரணம் காட்டி அவர் பேசியதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கச் செய்தார். முதல்வர் வன்முறையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடும்
பசுமை வீடுகளும் வழங்கப்படும் என்றார். நிபந்தனைகளை மீறி பொதுக்கூட்டத்தில் நடந்துகொண்ட பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதையும் முதல்வர்
தெளிவுபடுத்தினார்.
தமிழகத்தில் ஜாதி கலவரத்தைத் தூண்டுவோர், பொது அமைதிக்கு ஊறு விளைவிப்போர் மீது காவல் துரையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
|
|||||
by Swathi on 30 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|