தில்லாலங்கடி படத்திற்கு பிறகு ஜெயம் ராஜா இயக்கத்தில், தம்பி ஜெயம் ரவி, புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
பெயரிடப்படாத இந்த படத்தில், ஜெயம்ரவி ஹீரோவாக நடிக்க , நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். படத்தில் ஹாக்கி விளையாட்டு வீரராக ஜெயம் ரவி நடிக்கிறாராம். நயன்தாரா கராத்தே மாஸ்டராக நடிக்கிறாராம். இவர்கள் இருவரும் போலீஸ் அதிகாரிகளாகி, வில்லன்களின் சதித் திட்டங்களை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதை ஆக்ஷன் பொறி பறக்க படத்தில் சொல்கிறார்களாம். அண்ணன் - தம்பி கூட்டணியில் உருவாகும் ஆறாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
|