இந்திய பத்திரிகைகள் சங்கமான ஐ.என்.எஸ். சங்கத் தலைவராக ஜெயந்த் மேமன் மாத்யூ தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் (ஐஎன்எஸ்) 79வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இதில், 2018-19ம் ஆண்டுக்கான ஐஎன்எஸ் தலைவராக, மலையாள மனோரமாவின் ஜெயந்த் மேமன் மேத்யூ தேர்வு செய்யப்பட்டார்.
இணை தலைவராக மிட்-டே பத்திரிகையின் சைலேஷ் குப்தா, துணைத் தலைவராக ஹெல்த் அண்ட் ஆன்டிசெப்டிக் இதழின் எல்.ஆதிமூலம், கவுரவ பொருளாளராக இந்துஸ்தான் டைம்ஸ் (பாட்னா) பத்திரிகையின் சரத் சக்சேனா, செயலாளராக லவ சக்சேனாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
ஐஎன்எஸ்.சின் செயற்குழு உறுப்பினர்களாக, ஆர்.எம்.ஆர். ரமேஷ் (தினகரன்), பாலசுப்பிரமணிய ஆதித்தன் (தினத்தந்தி), எல்.லட்சுமிபதி (தினமலர்), சிரயாம்ஸ் குமார் (மாத்ருபூமி ஆரோக்யா மசிகா), ராஜபிரசாத் ரெட்டி (சாக்ஷி, விசாகபட்டினம்), பிஜூ வர்கேசி (மங்கலம் வீக்லி), விவேக் கோயங்கா, (இந்தியன் எக்ஸ்பிரஸ்), மோஹித் ஜெயின் (எகனாமிக் டைம்ஸ்), ராஜீவ் வர்மா (இந்துஸ்தான் டைம்ஸ், டெல்லி), அகிலா உரன்கர் (பிசினஸ் ஸ்டாண்டர்டு) உள்பட 41 பேர் இடம் பெற்றுள்ளனர்.
|