LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

இயேசு மனிதரா? தேவனா?

 

இயேசுவைப் பற்றி சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இங்கே பதியப்படுகிறது. ஒரு கன்னித் தாய்க்கு பிறந்த அந்த அதிசயக் குழந்தையை நாம் மனிதராக பார்ப்பதா? தேவனாக பார்ப்பதா? சத்குருவிடம் கேட்டபோது…
சத்குரு, இயேசு கடவுளின் குழந்தை என்று சொல்கிறார்களே?
சத்குரு:
இயேசு 2000 வருடங்களுக்கு முன்பு இருந்தவர். இப்போது அவருடைய பிறப்பை ஆராய்வதில் என்ன இருக்கிறது? இயேசு பிரசித்தி பெற்றதன் காரணமே அவர் எப்படி வாழ்ந்தார் என்பதுதான், அவர் எப்படிப் பிறந்தார் என்பதாலோ அல்லது அவர் எப்படி இறந்தார் என்பதாலோ அல்ல!
அவர் எப்படி வாழ்ந்தார் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், அவர் எப்படிப் பிறந்திருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினால் அவருடைய வாழ்க்கையின் முக்கியத்துவத்தை நாம் இழந்துவிடுவோம். இது ஒரு பெரிய தவறு என்றே நான் நினைக்கிறேன்.
அவருடைய பிறப்பை புதுமையான நிகழ்வாகக் கூறுவதால், அவர் போதித்தது நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கானது அல்ல என்ற முடிவிற்கு மக்கள் வந்துவிட முடியும். அவருடைய வாழ்க்கையே மெய்யுணர்வுத் தன்மையை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கொண்டு வருவதாகத்தான் இருந்தது.
அவர் புதுமையான முறையில் பிறந்ததால்தான் அவருடைய வாழ்க்கை அப்படி அமைந்தது என்று இப்போது நீங்கள் சொன்னால், உங்களுடைய வாழ்க்கையில் அந்த வாய்ப்பை நீங்கள் தவற விடுவீர்கள். இதை துரதிருஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
அது மட்டுமில்லை, நீங்கள் அப்படிச் சொல்லும்போது, நீங்கள் அவருக்கு எதிராகச் செயல்படுகிறீர்கள் என்றுதான் சொல்வேன். சத்குரு அவர்கள் புதுமையான முறையில் பிறந்தவர் என்று யாராவது பரப்பத் தொடங்கினால், பின்னர் நான் கற்றுத் தரும் எதையும் நீங்கள் கவனிக்க மாட்டீர்கள். நமக்கு அது வேலை செய்யாது என்ற முடிவிற்கு வந்துவிடுவீர்கள்.
அதனால் இயேசுவைப் பற்றி இதுபோன்று பேசினால், இயேசு வாழ்ந்ததற்கான நோக்கத்தையே நீங்கள் அழிக்கிறீர்கள். ஒருவர் எப்படி பிறந்தார், எப்படி இறந்தார் என்பது முக்கியமில்லை. அவர் எப்படி வாழ்ந்தார், எதற்காக வாழ்ந்தார் என்பதுதான் முக்கியம்.
உண்மையிலேயே அவருடைய பிறப்பு புதுமையானதாக இருந்தாலும் அதைப் பற்றிப் பேசக்கூடாது. அவ்வாறு செய்தால் அவருடைய வாழ்க்கையின் நோக்கத்தையே நீங்கள் தோல்வியடையச் செய்துவிடுவீர்கள்.
சரி, சத்குரு, இயேசுவின் பிறப்பைப் பற்றி நாம் பேச வேண்டாம், ஆனால் அந்த மாதிரி நடக்க வாய்ப்பு உள்ளதா?
சத்குரு:
இதற்கான வாய்ப்பு உள்ளது. இது கேட்பதற்கு அபத்தமாக இருக்கும். ஆனால் ஒரு பெண் வெகுதொலைவில் இருந்தே, உடல் தொடர்பு இல்லாமலேயே, கர்ப்பம் அடைய முடியும். இந்த மாதிரியான பரிசோதனைகள், யோகக் கலாச்சாரத்தில் நடந்துள்ளது. இதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், இது மிகவும் அரிதானது!

இயேசுவைப் பற்றி சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இங்கே பதியப்படுகிறது. ஒரு கன்னித் தாய்க்கு பிறந்த அந்த அதிசயக் குழந்தையை நாம் மனிதராக பார்ப்பதா? தேவனாக பார்ப்பதா? சத்குருவிடம் கேட்டபோது…


சத்குரு, இயேசு கடவுளின் குழந்தை என்று சொல்கிறார்களே?


சத்குரு:


இயேசு 2000 வருடங்களுக்கு முன்பு இருந்தவர். இப்போது அவருடைய பிறப்பை ஆராய்வதில் என்ன இருக்கிறது? இயேசு பிரசித்தி பெற்றதன் காரணமே அவர் எப்படி வாழ்ந்தார் என்பதுதான், அவர் எப்படிப் பிறந்தார் என்பதாலோ அல்லது அவர் எப்படி இறந்தார் என்பதாலோ அல்ல!


அவர் எப்படி வாழ்ந்தார் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், அவர் எப்படிப் பிறந்திருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினால் அவருடைய வாழ்க்கையின் முக்கியத்துவத்தை நாம் இழந்துவிடுவோம். இது ஒரு பெரிய தவறு என்றே நான் நினைக்கிறேன்.


அவருடைய பிறப்பை புதுமையான நிகழ்வாகக் கூறுவதால், அவர் போதித்தது நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கானது அல்ல என்ற முடிவிற்கு மக்கள் வந்துவிட முடியும். அவருடைய வாழ்க்கையே மெய்யுணர்வுத் தன்மையை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கொண்டு வருவதாகத்தான் இருந்தது.


அவர் புதுமையான முறையில் பிறந்ததால்தான் அவருடைய வாழ்க்கை அப்படி அமைந்தது என்று இப்போது நீங்கள் சொன்னால், உங்களுடைய வாழ்க்கையில் அந்த வாய்ப்பை நீங்கள் தவற விடுவீர்கள். இதை துரதிருஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.


அது மட்டுமில்லை, நீங்கள் அப்படிச் சொல்லும்போது, நீங்கள் அவருக்கு எதிராகச் செயல்படுகிறீர்கள் என்றுதான் சொல்வேன். சத்குரு அவர்கள் புதுமையான முறையில் பிறந்தவர் என்று யாராவது பரப்பத் தொடங்கினால், பின்னர் நான் கற்றுத் தரும் எதையும் நீங்கள் கவனிக்க மாட்டீர்கள். நமக்கு அது வேலை செய்யாது என்ற முடிவிற்கு வந்துவிடுவீர்கள்.


அதனால் இயேசுவைப் பற்றி இதுபோன்று பேசினால், இயேசு வாழ்ந்ததற்கான நோக்கத்தையே நீங்கள் அழிக்கிறீர்கள். ஒருவர் எப்படி பிறந்தார், எப்படி இறந்தார் என்பது முக்கியமில்லை. அவர் எப்படி வாழ்ந்தார், எதற்காக வாழ்ந்தார் என்பதுதான் முக்கியம்.


உண்மையிலேயே அவருடைய பிறப்பு புதுமையானதாக இருந்தாலும் அதைப் பற்றிப் பேசக்கூடாது. அவ்வாறு செய்தால் அவருடைய வாழ்க்கையின் நோக்கத்தையே நீங்கள் தோல்வியடையச் செய்துவிடுவீர்கள்.


சரி, சத்குரு, இயேசுவின் பிறப்பைப் பற்றி நாம் பேச வேண்டாம், ஆனால் அந்த மாதிரி நடக்க வாய்ப்பு உள்ளதா?


சத்குரு:


இதற்கான வாய்ப்பு உள்ளது. இது கேட்பதற்கு அபத்தமாக இருக்கும். ஆனால் ஒரு பெண் வெகுதொலைவில் இருந்தே, உடல் தொடர்பு இல்லாமலேயே, கர்ப்பம் அடைய முடியும். இந்த மாதிரியான பரிசோதனைகள், யோகக் கலாச்சாரத்தில் நடந்துள்ளது. இதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், இது மிகவும் அரிதானது!

by Swathi   on 30 Mar 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.