காவிரி நதிநீர் ஆணையம் 1997-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைவராக பிரதமரும், உறுப்பினர்களாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில முதல் அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர். காவிரி தண்ணீரை பங்கிட்டுக்கொள்வதில் பிரச்சினை ஏற்பட்ட போது கடந்த 2003-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி நதிநீர் ஆணைய கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இதுவரை இந்த ஆணையத்தின் கூட்டத்தை கூட்டவில்லை. நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்தாத கார்நாடக அரசு இடைக்கால தீர்ப்பின் படி தண்ணீரை திறந்த விட வேண்டும் என்றும், காவிரி நிதிநீர் ஆணையத்தை கூட்ட வேண்டும் என்றும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, டெல்லியில் வருகிற 19-ந்தேதி மாலை 4 மணிக்கு காவிரி நதிநீர் ஆணைய கூட்டம் கூடுகிறது. பிரதமர் இல்லத்தில் ஆணையத்தின் 7-வது கூட்டம் நடைபெற உள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக வருகிற 19-ஆம் தேதி முதல்வர் டெல்லி செல்கிறார்.
|