LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ரூ28 கோடியில் 1,980 பேருக்கு தீ பாதுகாப்பு உடைகள்-ஜெயலலிதா

 

சென்னை, ஜூலை 31: தீயணைப்பு வீரர்கள், அலுவலர்கள் 1,980 பேருக்கு ரூ.28 கோடி மதிப்பிலான தீ பாதுகாப்பு உடைகள் அளிக்கப்படும் மற்றும் 
சென்னை நகரின் பயன்பாட்டுக்கு ரூ.6 கோடி மதிப்பில் நவீன தீயணைப்பு வாகனம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தீ விபத்து ஏற்படும் இடங்களில் தீயை அணைத்து உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்கும் கடினமான பணியை தீயணைப்பு வீரர்கள் 
மேற்கொள்கின்றனர்.அவர்களின் உயிரைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு தற்காப்பு உடைகளை ரூ.28 கோடியில் வழங்க முதல்வர் 
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இந்த தற்காப்பு உடைகள், மாநிலத்திலுள்ள 302 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு மொத்தம் 
1,980 பேருக்கு வழங்கப்படும்.சென்னை நகரின் பயன்பாட்டுக்காக 54 மீட்டர் உயரம் வரை வான் நோக்கி உயரும் நீட்டிப்பு ஏணி கொண்ட ஒரு 
ஊர்தியை ரூ.5.97 கோடி மதிப்பில் வாங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஊர்தி தென் சென்னை கோட்டம் அசோக் நகர் 
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு வழங்கப்படும். இதன் மூலம் அடுக்குமாடி கட்டடங்களில் தீ விபத்து ஏற்படின் உடனடியாக 
தடுக்க முடியும்.

சென்னை, ஜூலை 31:


      தீயணைப்பு வீரர்கள், அலுவலர்கள் 1,980 பேருக்கு ரூ.28 கோடி மதிப்பிலான தீ பாதுகாப்பு உடைகள் அளிக்கப்படும் மற்றும் சென்னை நகரின் பயன்பாட்டுக்கு ரூ.6 கோடி மதிப்பில் நவீன தீயணைப்பு வாகனம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தீ விபத்து ஏற்படும் இடங்களில் தீயை அணைத்து உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்கும் கடினமான பணியை தீயணைப்பு வீரர்கள் மேற்கொள்கின்றனர்.அவர்களின் உயிரைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு தற்காப்பு உடைகளை ரூ.28 கோடியில் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த தற்காப்பு உடைகள், மாநிலத்திலுள்ள 302 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு மொத்தம் 1,980 பேருக்கு வழங்கப்படும். சென்னை நகரின் பயன்பாட்டுக்காக 54 மீட்டர் உயரம் வரை வான் நோக்கி உயரும் நீட்டிப்பு ஏணி கொண்ட ஒரு ஊர்தியை ரூ.5.97 கோடி மதிப்பில் வாங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இந்த ஊர்தி தென் சென்னை கோட்டம் அசோக் நகர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு வழங்கப்படும். இதன் மூலம் அடுக்குமாடி கட்டடங்களில் தீ விபத்து ஏற்படின் உடனடியாக தடுக்க முடியும்.

by Swathi   on 01 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.