|
||||||
இந்திய துணைத் தூதர் கைது விவகாரம் - மனிப்பு கோரியது அமெரிக்க அரசு !! |
||||||
இந்திய துணைத் தூதர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.
நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக பணிபுரிந்து வருபவர் தேவயானி. இவர் விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காகப் போயிருந்தபோது சாலையில் வைத்து இவரைக் கைது செய்த அமெரிக்க காவல்துறை அதிகாரிகள், கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப் பட்ட தேவயானியை ஆடைகளை அவிழ்த்து அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டதாகவும், மேலும் அவரை போதை அடிமைகளுடன் அடைத்து வைத்ததாகவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, இரண்டரை லட்சம் டாலர் பிணைப் பத்திரத்தில் ஜாமீனில் வெளி வந்தார் தேவயானி.
இந்தியத் துணைத் தூதரை இவ்வாறு நடத்தியது இந்தியாவையே அவமானம் செய்யும் செயல் என கொந்தளித்த இந்திய அரசு, இது தொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது. ஆனால் தேவயானியின் கைது நடவடிக்கையை நியாயப் படுத்தியது அமெரிக்கா. இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்படும் நிலை உண்டானது. அதனைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்க துணைத்தூதரகங்களுக்கும் வழங்கப்படும் சலுகைகளை நிறுத்தி மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறபித்தது.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டதுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு சலுகை பறிப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. இந்தியாவின் அதிரடியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது இந்திய தூதரக அதிகாரியின் கைது நடவடிக்கையை மறு ஆய்வு செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், துணைத் தூதர் தேவயானியின் வயதில் தமக்கு இரண்டு மகள்கள் இருப்பதாகவும், அவரின் கைது விவகாரத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள உணர்வுப்பூர்வமான வெளிப்பாடுகளை உணர்ந்து கொண்டுள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளின் மதிப்பும், கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைப்பதைப் போலவே, பிறநாட்டு தூதரக அதிகாரிகளின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டியதும் அவசியம் என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளதாக தொலைபேசி உரையாடலின்போது, கெர்ரி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாரத விதமாக நடந்த தேவயானியின் கைது விவகாரத்தினால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு பாதிக்கப்படுவதை அமெரிக்கா அனுமதிக்காது என்றும் ஜெர்ரி கூறியதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு முக்கியத்துவம் அளித்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார். |
||||||
by Swathi on 18 Dec 2013 0 Comments | ||||||
Tags: இந்திய தூதர் கைது தேவயாணி தேவ்யானி இந்திய துணைத் தூதர் Indian Diplomats John Kerry | ||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|