LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மூன்றே மாதத்தில் முடிந்த படம், இசை அமைக்க 2500 ரூபாய்தான் செலவு : விஷால்....

மத கஜ ராஜா படத்தை தொடர்ந்து, சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடித்திருக்கும் படம் ஆம்பள. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கிறார்.

மேலும் இவர்களுடன் சதீஷ், வைபவ், சந்தானம், கிரண், ரம்யா கிருஷ்ணன் என ஒரு நடிகர், நடிகைகள் பட்டாளமே நடித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி முதன் முறையாக இசை அமைத்திருக்கிறார்.  படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை அன்று காலையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஷால் பேசும் போது,

முதலில் படத்தின் தலைப்பு பற்றி ஒரு பயம் வந்தது. இந்தப் படம் ஆரம்பிக்கும் போது எனக்கு இன்னொரு பயம் இருந்தது. ஏற்கெனவே சுந்தர்சியுடன் இணைந்து நடித்த 'மத கஜ ராஜா' படம்  இன்னமும் வெளிவரவில்லை.சினிமாவில் செண்டிமெண்ட் அதிகம்.அதனால் பலரும் கேட்டார்கள், ஏற்கெனவே இப்படி இருக்கும் போது மறுபடியும் சுந்தர் சியுடனா படம் பண்ணப்போறே? என. இருந்தாலும் நான் தெளிவாக முடிவாக இருந்தேன். இந்த 'ஆம்பள' லைன் முன்பே சொல்லப்பட்டதுதான் .சுந்தர்.சிக்கும் எனக்குமான நல்லுறவு நன்றாக இருக்கிறது. அது ஒரு சொத்து போன்றது.

செப்டம்பர் 20ல் தொடங்கிய படம் டிசம்பர் 26ல்  தயாராகி விட்டது. மூன்றே மாதத்தில் முழுப்படமும் முடித்தோம் எல்லாரையும் விரட்டி விரட்டி வேலை வாங்கினோம். பலரும் எனக்காக கஷ்டப்பட்டு உழைத்தார்கள்.

நெருக்கடியில் பதற்றத்துடன் டென்ஷனுடன் உழைத்திருக்கிறார்கள். இப்படி சிரமப்படுத்தி கஷ்டப் படுத்துவது இது  கடைசிப் படமாக இருக்கட்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். இனியும்  ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு இப்படிச்செய்வது நல்லதல்ல.ஆனாலும் சுந்தர்.சி சார் சீக்கிரம் முடித்தாலும் தரமாகவும் முடித்திருக்கிறார் .
 படம் முடிந்துதான் விடுமுறைப் பயணம் போவார்கள். இந்தப் படமே ஜாலியான ஹாலிடே அனுபவமாக இருந்தது. டைரக்டர் அந்த அளவுக்கு டென்ஷன் இல்லாமல் எடுத்தார்.

இந்தப் படத்துக்கு இசையமைக்க மெட்டுப்போட 2500 ரூபாய்தான் செலவு . ஆர்.ஏ. புரத்தில் தங்கி இதை ஹிப் ஹாப் தமிழா செய்தார். பாங்காக், ஸ்பெயின் எல்லாம் போகவில்லை. பஜ்ஜி, டீ செலவுதான் பெரிய செலவு.இதை வெளியிடும் வி மியூசிக்கில் இதன்  6 பாடல்களும் பெரிய அளவில் வெற்றிபெறும்...

முதன்முதலில் ஹன்சிகா என்னுடன் நடித்து இருக்கிறார்.ஹன்சிகா  ஜோடி என்றதுமே எனக்குப் பயம். அவர் நல்ல வெள்ளை. நான் அட்டகறுப்பு. கேமரா மேனுக்கு கஷ்டம் என்று நினைத்தேன். 'நீ லண்டன் லட்டு நான் மதுரை புட்டு' என்று பாட்டே வரும். இருந்தாலும்  அவர் சமாளித்து எடுத்தார். சினிமா என் தாய் மாதிரி. அதற்கு யார் கெடுதல் செய்தாலும் விடமாட்டேன். திருட்டு விசிடிக்காக தொடர்ந்து போராடுவேன். "இவ்வாறு விஷால் விழாவில் பேசினார்.

by Swathi   on 29 Dec 2014  0 Comments
Tags: ஆம்பள   விஷால்   Aambala              
 தொடர்புடையவை-Related Articles
விஜய் புலி... விஷால் பாயும் புலி... விஜய் புலி... விஷால் பாயும் புலி...
விஷால் - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படமா !! விஷால் - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படமா !!
விஷால் - சுசீந்திரன் படத்தின் தலைப்பு வெளியானது !! விஷால் - சுசீந்திரன் படத்தின் தலைப்பு வெளியானது !!
என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே கிடையாது! அப்படி வைத்தாலும் நண்பர்களை அழைக்க மாட்டேன் - சொல்கிறார் விஷால்... என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே கிடையாது! அப்படி வைத்தாலும் நண்பர்களை அழைக்க மாட்டேன் - சொல்கிறார் விஷால்...
கிடைத்தது யு சான்றிதல்... பொங்கல் அன்று வெளியாகிறது ஆம்பள.. கிடைத்தது யு சான்றிதல்... பொங்கல் அன்று வெளியாகிறது ஆம்பள..
முதலில் கார்த்தி, அடுத்து விஷால்... இது லிங்குசாமியும் அடுத்த வருட திட்டம் !! முதலில் கார்த்தி, அடுத்து விஷால்... இது லிங்குசாமியும் அடுத்த வருட திட்டம் !!
மூன்றே மாதத்தில் முடிந்த படம், இசை அமைக்க 2500 ரூபாய்தான் செலவு : விஷால்.... மூன்றே மாதத்தில் முடிந்த படம், இசை அமைக்க 2500 ரூபாய்தான் செலவு : விஷால்....
ஆம்பள படத்தில் போலிஸ் வேடத்தில் சந்தானம், ஹன்சிகா !! ஆம்பள படத்தில் போலிஸ் வேடத்தில் சந்தானம், ஹன்சிகா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.