|
||||||||
க. சீ. கிருட்டிணன் (இயற்பியல்) |
||||||||
சர், கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் (Kariamanickam Srinivasa Krishnan, கே. எசு. கிருட்டிணன்), டிசம்பர் 4 1898 – சூன் 14 1961) ஒரு புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர். ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற சர். சி. வி. இராமன் உடன் இணைந்து இவரும் இக் கண்டுபிடிப்பில் பங்கு கொண்டார். வாழ்க்கை கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன், பொதுவாக கே. எசு. கிருட்டிணன் (K. S. Krishnan) அல்லது கே.எசு.கே (KSK) என்றே அறியப்பட்டார். இவர் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு (Watrap) என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை வேளாண்மைத் தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் தமிழிலும் சமசுக்கிருதத்திலும் ஆழமான புலமையும் அறிவும் கொண்டிருந்தார். கிருட்டிணன், திருவில்லிப்புத்தூரில் இருந்த ஜி.எசு. இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவர் 1940 இல் பிரித்தானியாவில் உள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்வு செய்யப்பட்டார். 1946 இல் செவ்வீரர் (சர், knight) என்று பெருமைப்படுத்தப்பட்டார். 1954 ஆம் ஆண்டும் இந்தியாவின் பத்ம பூசன் விருது பெற்றார்[1]. 1961 இல் பட்னாகர் நினைவுப் பரிசு பெற்றார். இவரை பெருமை படுத்தும் விதமாக கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் அரங்கத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டு, அந்த அரங்கத்தின் முன்பு இவர் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. வகித்த பதவிகள் சர்வதேச பௌதிக ஆராய்ச்சி இந்திய தேசிய கமிட்டியின் தலைவர். தேசிய பௌதிக ஆராய்ச்சி கமிட்டியின் இயக்குனர். கிருட்டிணன் தமிழில் எழுதிய கட்டுரைகள் நான் விஞ்ஞானத்தில் ஈடுபட்டவிதம். பூமியின் வயது என்ன. சூரிய சக்தி. உலக புரட்சியாளர் ஐன்ஸ்டைன். |
||||||||
by Swathi on 01 Nov 2014 0 Comments | ||||||||
Tags: Kariamanickam Srinivasa Krishnan க. சீ. கிருட்டிணன் Tamil Physicist | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|