LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

காலைப்பொழுதே வருக !

நம் இனிய

நினைவலைகளை

சூரியன் வந்து தன்

சுடர் விடும் விரல்களால்

தட்டி எழுப்புகிறான் !

 

 காலைப்பொழுதே

 கனிவுடன் வந்து

 இனிய நிகழ்வுகளை

 இதயத்தில் நிறுத்துவாய் !

 

புல்லின் நுனியில்

கிரீடம் சூடி மகிழும்

மார்கழிப் பனித்துளியே

மனம் குளிர வருவாய் !

 

மலரக் காத்திருக்கும்

மலர் மொட்டுக்களே

மொட்டவிழ்த்து

மணம் பரப்ப வருவாய் !

 

காலைப்பொழுதே

இன்று பொன்னாள்

என்று அனைவருக்கும்

நன்று சொல்லி 

நின்று வரவேற்பாய்

 

இளம் சூரியனின்

வரவை சிறகடித்து

சிட்டுக் குருவிகளே  

வரவேற்க வருவாய்  

 

ஆடும் மயில்களே

பாடும் குயில்களே

துள்ளி ஓடும் மான்களே

துள்ளும் மீன்களே

காலைப்பொழுதை

வரவேற்க வாருங்கள் !

 

நாட்காட்டியில்

தேதி கிழிந்தாலும்

கிழியாவிட்டாலும்

கிழக்கில் ஆதவன்

வர மறப்பதில்லை ! 

 

காலைப்பொழுதே

கனிவுடன் வருக

இனியவை தருக !

 

by Subramanian   on 01 Sep 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.