காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு நல்லாண்மை என்னும் புணை. |
|
|
திருக்குறள் AUDIO |
|
|
|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition): |
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன. |
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition): |
(நாணும் நல்லாண்மையும் காமவெள்ளத்திற்குப் புணையாகலின்,அதனால் அவை நீங்குவன அல்ல என்றாட்குச் சொல்லியது) நாணொடு நல்லாண்மை என்னும் புணை - யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் ஆகிய புணைகளை; காமக்கடும் புனல் உய்க்குமே - என்னிற பிரித்துக் காமமாகிய கடிய புனல் கொண்டு போகாநின்றது. (அது செய்யமாட்டாத ஏனைப் புனலின் நீக்குதற்கு, 'கடும்புனல்' என்றான். 'இப்புனற்கு அவை புணையாகா; அதனான் அவை நீங்கும்', என்பதாம்.) |
மணக்குடவர் உரை: |
யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையுமாகிய புணைகளை என்னிற் பிரித்துக் காமமாகிய கடியபுனல் கொண்டுபோகா நின்றது. |
தேவநேயப் பாவாணர் உரை: |
( நாணும் நல்லாண்மையுங் காமவெள்ளத்திற்குப் புணையாகவின் , அதனால் அவை நீங்குவனவல்ல என்ற தோழிக்குத் தலை மகன் சொல்லியது . ) நாணொடு நல் ஆண்மை என்னும் புணை - நான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையுமாகிய புணைகளை ; காமக் கடும்புனல் உய்க்குமே - காமமாகிய பெரு வெள்ளம் அடித்துக்கொண்டு போகின்றதே ! நான் என்செய்வேன் !. புணையென்றது மிதவையும் கட்டுமரமும் பரிசலுந் தெப்பமும் போண்ற கடத்தக் கருவிகளை . அவற்றை என்னோடு அடித்துக்கொண்டு போகுமளவு வெள்ளம் பெருக்கும் வேகமுங் கொண்ட தென்பது தோன்றக் ' கடும்புனல் ' என்றாள் . ஏகாரம் இரங்கற் பொருட்டு . |
கலைஞர் உரை: |
காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது. |
சாலமன் பாப்பையா உரை: |
ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது. |
Translation |
Love's rushing tide will sweep away the raft
Of seemly manliness and shame combined. |
Explanation |
The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust. |
Transliteration |
Kaamak Katumpunal Uykkum Naanotu
Nallaanmai Ennum Punai |
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம் |
|