LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்)

காற்றே.....

வழமையைப் போலவே
பிசிறேறிய வார்த்தைதானுமில்லை பிச்சையிட
பிறகேன் அலைகிறாய்
வெறுமை குலுங்கும் பாத்திரத்தோடு.

இடிந்துபோய்க்கிடக்கிற கோயிலின் சிலையாய்
திசைமுகம்நோக்கி இந்தக் கிராமமே
இருகையேந்தி நிற்கிறது.
இந்தலட்சணத்தில
வாசல்தோறும் வந்திரந்து திரிகிறாய்.
வரவேற்பு உபசாரம் அல்ல
வல்லடிவசைகூட உனக்கில்லை.

வாயைமூடிக்கட்டியவாறே
மாரிக்கிணற்றில் ஓசைப்படாதிறங்கி
தற்கொன்ற முதியவர்க்கும்
உன்மீதிருந்த வன்மத்தைப் பார்த்தாயா?
என்னதான் இரந்தும்
ஒரு ஒப்பாரிதன்னும் பெறமுடியாமற் போனமுன்றலில்
அந்திரெட்டி சடங்கெனும் ஆரவாரங்களும்
அற்றுப்போன பின்னாலும் ஏன் வளையவருகிறாய்

ஓர் அந்நியன்போல விலகிச்செல்ல முடியாமல்?

பருக்கைகளுக்கு ஆலாய்ப் பறக்கிற காக்கைகளும்
நக்குத்தீனுக்குச் சண்டையிடும் நாய்களும்
சீந்தாத முற்றத்தில்
பூனைவால் மிருது காட்டிப் புகுந்து தடவுகிறாய்.

"சூய்"யென்று விரட்டுகிற சொல்லும் தெறிக்காத
சூனியத்திலிருந்து தொட்டெடுத்துப் பாத்திரப்படுத்தக் கூடியதாய்
ஒரு பருக்கையும் இல்லாது போனமை சோகம்தான்
என் செயலாம்?

இந்த சந்தி விருட்சத்தைப் பார்த்தாயா
முந்தியெல்லாம் நிழலுக்கு ஒதுங்கவரும் மனிசரிடம்
நேசபாவத்தோடு விசிறிக் கொடுத்தவாறே
குசலம் விசாரிக்கும்,
வித்துயிர்த்த காலத்திலிருந்து வேரூன்றிப் பந்தலாய்
வியாபித்த நாள் வரைய வரலாற்றை விபரிக்கும்.
இன்றோ நிழலுக்கு ஒதுங்கவும்
நேச பாவத்துறவு கொள்ளவும் மனுவின்றிப் போக
நினைவுகளைச் சருகுதிர்க்கும்
வெற்று வெளியில் விரல் கிளைத்திட தற்புலம்பும்
மொட்டைக் கனவுகளை முணுமுணுக்கும்.

காற்றே நீயும் போ
நெடுநாள் நினைவுகளைக் கோதிக் கோதி
முடியைப் பிய்த்துக் கொள்ளும் மனிசரைப் போல
சருகுதிர்த்த நினைவுகளைக் கிளறிப்பார்
உருவெழுந்தால் கொடுக்கை வரிந்துகட்டியந்த
ஒற்றைப் பனையின் சிரசைப் பிடித்துலுப்பு
உன்மதத்தம் குறைந்ததென்றால் கீழிறங்கி வா
போக்கிழந்து கிடக்கின்ற தெருவின்
புழுதியை ஊதி ஊதி
உறவுகளின் சுவடிருந்தால் தேடுவோம்
நீயும் நானுமாய்.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.