LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்)

காயப்படுத்தப்பட்ட தேவதைக்கு

கண்முன்னாலேயே
கொள்ளைபோகிறது கிராமம்.
விழிகளை இறுக மூடிக்கொண்டிருப்பதாய்
பாவனை செய்தாக வேண்டும்.

இன்று மாலையும்
படையினன் ஒருவன் வீசிச்செல்கிறான்
உடைத்தபெட்டகம் ஒன்றின்
ஒடிந்தகாலை.

கிராமதேவதையின் அணிகலன்கள் யாவுமே
களவாடப்பட்டு விட்டன.
ஒற்றைச்சிலம்பும் இவள் உடைமையாயில்லை.
பறிபோயின
பேச்சொலியும், கைவளையோசை வீச்சு நடையும்
பிறைநுதற் திலகமும்
அந்நியன் கைப்பட்டழிந்ததெனவாயிற்று.

சந்திவிருட்சங்களின் கீழே
இவளின் இதயஒளிர்வாய விளக்குகள் எரிவதில்லை
குந்தியிருந்தழுகிறாள் குமையும் இருள் நடுவே.

வல்லிருளின் ஆட்சி,
வழிப்போக்கிலும் இருள்தான்
வாழ்விடங்கள் எங்கும் இருள்.

பில்லிசூனியத்தில் பீடழிந்தனவாய் மனைகள்
எங்காவது ஓர் இடுக்கிடை
எட்டிப் பார்க்கின்ற ஆவிகள் போல
வாழ்வுறிஞ்சப்பட்ட வற்றல்மனிதர்.

எப்போதாவது
வீதிக்கு வருவார்கள்
கட்புலனாகா விலங்குகளுடன் இழுபடுபவர்களாய்.
ஒவ்வோர் சனிக்கிழமையும்
நிவாரணத்திற்காகக் கூடும் இவர்களைக் காணின்
விரத காலத்துக் காக்கைகளின் நினைவெழும்
ஆயினும்
கரைதல் இலாது
பொதிசுமந்து செல்வார்கள்
இன்னும் பிரதோஷம் நீங்கப்பெறாத விரதகாரராகவே.


வாசலிலே
பரபரத்தவாறே வரவேற்கக் குரல்இராது
பொதி இறக்கி வைக்கையிலே
பிதுங்கி வழிகின்ற துயரப்பெருமூச்சை ஆர்கேட்பார்?

பொங்கி வைத்தாறிய சோற்றின் பருக்கைகளுள்
தொலைந்துபோன வாழ்வினைத் தேடிடும் விரல்களிலோ
பிசைபடும் பழைய நினைவுகள்.

எடுத்திட்ட கவளமும் முட்களாய் இறங்க
நெஞ்சு நிரம்பவும் கீறல்கள், கிழியல்கள்
காயப்படுத்தப்பட்ட நினைவுகளில்
கண்பிளக்கும் புண்கள்
புண் உமிழ் கசிவுகள்.
கட்டிபட்ட ரணமாய்
உள்ளே அனல் கொதிக்கும்.

கொதித்தென்ன? குமுறியென்ன?
பட்டகாயங்களின் குருதிவாடையும் தெறிக்காத
வார்த்தைகளோடு குரல்வளையை
காத்தாக வேண்டும்.

தாயே கிராமதேவதா,
கொலுவிழந்தாய்
கொலுசின் குரலிழந்தாய்.
முள்ளில் அழுந்தும் நின்பாதநோவுகள்
எனது மெல்லிதயத்துள் விம்மும்.

எனினும் என் விசனமெல்லாம்
முட்கள் குறித்தோ
முட்களை விதைத்தவர் குறித்தோ அன்று.

பாவனைகளின்றி
நோவுண்டபாதங்களில்
எதைக் காணிக்கையாக்குதல் என்பது பற்றியது.

மௌனமாய்
வார்த்தைகள் அலம்பாத எம் வாசலருகே
வந்து போயேன்
கண் நீரலித்த மண்
நின் காலடிகளுக்கு ஒத்தடமாய் இருக்குமெனின்.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.