|
|||||
கடல் - ஒரு திரை கண்ணோட்டம் |
|||||
நடிகர் : கெளதம் கார்த்திக்
நடிகை : துளசி நாயர்
இயக்குனர் :மணிரத்னம்
இசை : ஏ.ஆர்.ரகுமான்
கடல் படத்தை பார்த்தபோது, ரோஜா, தளபதி, மும்பை, நாயகன் போன்றப் படங்களை இயக்கிய மணிரத்னமா, இப்படி ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்! என்று அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது இந்த படம்.
தேவனுக்கும் சாத்தனுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே படத்தின் ஒரு வரி கதை.
படத்தில் நாயகன் என கௌதமை முன் நிறுத்தியிருந்தாலும், அரவிந்த்சாமி தான் படத்தின் நயகானாக வலம் வருகிறார். கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் கடவுளின் பக்கம் அரவிந்த் சாமியும் சாத்தனின் பக்கம் ஆக்க்ஷன் கிங் அர்ஜுனும் நிற்கிறார்கள். பாதிரியாருக்கான பயிற்சிக் கல்லூரியில் இருந்து முறைகேடான நடத்தை காரணமாக அர்ஜுன் வெளியேற்றப்படுவதற்கு, அரவிந்த்சாமி காரணமாகிறார். இதை மனதில் வைத்து அவருக்கு தொல்லை கொடுக்கிறார் அர்ஜுன். அரவிந்த்சாமியால் வளர்க்கப்படும் சிறுவன் கௌதமை தன்னைப் போலவே அசுர குணம் படைத்தவனாய் மாற்ற நினைக்கிறார் அர்ஜுன். ஆனால் அவரை மீண்டும் நல்வழிக்கு திருப்புகிறார் கதாநாயகி துளசி. பொறுமையின் சிகரமாய் இருக்கும் அரவிந்த் சாமி கடைசியில் அர்ஜுனின் தொல்லை தாங்காமல் கொதித்தெழுகிறார். ஆனால் கௌதம் அர்ஜுனை காப்பாற்றுவதோடு, அரவிந்த்சாமியையும் பாவம் செய்யாமல் காப்பாற்றுகிறார். இதுவே படத்தின் முழுகதை.
அர்ஜுன் மற்றும் அரவிந்த்சாமி மிகப் பொருத்தமான தேர்வு. ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல்கள் பரவாயில்லை. படம் காட்சியாக்கப்பட்ட விதம் சிறப்பு. மொத்தத்தில் கடல் போரடிக்கும் ஒரு மடல்.
நடிகர் : கெளதம் கார்த்திக் நடிகை : துளசி நாயர் இயக்குனர் :மணிரத்னம் இசை : ஏ.ஆர்.ரகுமான்
விமர்சனம் : கடல் படத்தை பார்த்தபோது, ரோஜா, தளபதி, மும்பை, நாயகன் போன்றப் படங்களை இயக்கிய மணிரத்னமா, இப்படி ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்! என்று அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது இந்த படம். தேவனுக்கும் சாத்தனுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே படத்தின் ஒரு வரி கதை. படத்தில் நாயகன் என கௌதமை முன் நிறுத்தியிருந்தாலும், அரவிந்த்சாமி தான் படத்தின் நயகானாக வலம் வருகிறார். கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் கடவுளின் பக்கம் அரவிந்த் சாமியும் சாத்தனின் பக்கம் ஆக்க்ஷன் கிங் அர்ஜுனும் நிற்கிறார்கள். பாதிரியாருக்கான பயிற்சிக் கல்லூரியில் இருந்து முறைகேடான நடத்தை காரணமாக அர்ஜுன் வெளியேற்றப்படுவதற்கு, அரவிந்த்சாமி காரணமாகிறார். இதை மனதில் வைத்து அவருக்கு தொல்லை கொடுக்கிறார் அர்ஜுன். அரவிந்த்சாமியால் வளர்க்கப்படும் சிறுவன் கௌதமை தன்னைப் போலவே அசுர குணம் படைத்தவனாய் மாற்ற நினைக்கிறார் அர்ஜுன். ஆனால் அவரை மீண்டும் நல்வழிக்கு திருப்புகிறார் கதாநாயகி துளசி. பொறுமையின் சிகரமாய் இருக்கும் அரவிந்த் சாமி கடைசியில் அர்ஜுனின் தொல்லை தாங்காமல் கொதித்தெழுகிறார். ஆனால் கௌதம் அர்ஜுனை காப்பாற்றுவதோடு, அரவிந்த்சாமியையும் பாவம் செய்யாமல் காப்பாற்றுகிறார். இதுவே படத்தின் முழுகதை. அர்ஜுன் மற்றும் அரவிந்த்சாமி மிகப் பொருத்தமான தேர்வு. ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல்கள் பரவாயில்லை. படம் காட்சியாக்கப்பட்ட விதம் சிறப்பு. மொத்தத்தில் கடல் போரடிக்கும் மடல்.
|
|||||
by Swathi on 11 Feb 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|