தேவையானவை :
1. வறுத்த கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
2. துருவிய தேங்காய் - 100 கிராம்
3. வரமிளகாய் - 3
4. புளி - சிறிது
5. உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை :
1. எண்ணெய் - 2 டீஸ்பூன்
2. கடுகு - 1 டீஸ்பூன்
3. உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
4. சின்ன வெங்காயம் - 5 (நறுக்கியது)
5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கால் டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிதமான அனலில் வரமிளகாய் சேர்த்து வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்த கடலைப் பருப்பு சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
2. பிறகு மிக்ஸியில் வறுத்த கடலைப் பருப்பு, வரமிளகாய் சேர்த்து, அதோடு துருவிய தேங்காய், புளி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
3. பின்பு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றினால், கடலைப்பருப்பு சட்னி ரெடி!!!
|