LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

கடனை அடைத்த கக்கன்ஜி

கக்கன் , விழா முடிந்து வீட்டிற்குத் திரும்பினார் . காலையில் ஓர் ஆள் விட்டு நாவினிப்பட்டி மைனரை அழைத்துவரச் சொன்னார் . நாவினிப்பட்டி மைனர் வேறு ஏதோ காரணங்களுக்காக அழைப்பு வந்துள்ளதாக எண்ணி வந்தார் . வந்த மைனரிடம் நலன் விசாரித்து விட்டு 11,000 ரூபாயை எடுத்துக் கொடுத்தார் . இத்துணை நாள் தாமதமானதற்கு வருத்தம் தெரிவித்து உதவிக்கு நன்றியையும் சொன்னார் .

நாவினிப்பட்டி மைனரால் நம்ப முடியவில்லை . மைனருக்குக் கடனாகப் பணம்கொடுத்த நினைவு கூட இல்லை . ‘ ஏன் கொடுக்கிறீர்கள் நான் தங்களுக்குக் கடனாகக் கொடுக்கவில்லை . நண்பர் என்ற முறையில் உதவினேன் . அவ்வளவுதான் . இந்தச் சிறுதொகையை நீங்கள் பெரிதாக எண்ணக்கூடாது . நட்பின் அடிப்படையில் கொடுத்ததைக் கடன் கொடுத்தது போல் திருப்பித் தருவது அவ்வளவு நல்லதாக இல்லை’ என்று கூறி வாங்க மறுத்தார் . கக்கன் விடுவதாக இல்லை , ‘ இந்தப் பணத்தை எனது அவசரத் தேவைக்கு நான் ஆள் அனுப்பிப் பெற்றேன் . ஆகவே அது கடன் தான் . அதனால் , தாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லையென்றால் நமது நட்பை வளர்க்க முடியாமல் போகும் . அதனால் , பெற்றே ஆகவேண்டும்’ என்று கட்டாயப்படுத்திக் கொடுத்தார் .

நட்பின் அருமை கருதி நாவினிப்பட்டி மைனர் வாங்க மனம் இல்லாமல் வாங்கிக் கொண்டார் . மைனர் விடை பெற்றுச் சென்றாலும் அவரது மனம்மட்டும் கக்கனின் உண்மைக்கும் , அன்பிற்கும் இடையே தங்கித் திகைத்து மகிழ்ந்தது என்றே சொல்லலாம் .

தேர்தலில் நிற்பதே பணம் திரட்டத்தான் என்று முடிவுக்கு வரும் அளவிற்குச் சில அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் இருப்பதை இன்றும் காண முடிகிறது . தேர்தல் செலவிற்குச் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து உதவி கேட்ட வரலாறும் அந்த விளம்பரம் கண்டு அனுப்பிய பண விடைகளைக் ( Money Order) கையொப்பமிட்டு வாங்காமல் கையொப்ப முத்திரையிட்டு வாங்கிய வரலாறும் நமது தமிழகத்தில் நடந்தது உண்டு . குறிப்பாகத் தேர்தல் செலவிற்குப் பணம் வேண்டும் என்றுக் கேட்டாலே அது நன்கொடைதான் என்ற புதுப்பொருளோடு இன்று நிலவி வருகிறது . ஆனால் , கக்கன் தமது வாழ்நாளில் தேர்தல் செலவிற்கு உதவி பெற்றிருந்தாலும் தாம் என்ன சொல்லிப் பெற்றோமோ அவ்வாறே வாங்கியதைத் திருப்பித் தந்து முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவராக இருந்தார் . காலம் கடந்தாலும் வாக்கு மாறாத கொள்கையைக் கொண்டவர் கக்கன் என்பதை நம்மால் உணரமுடிகிறது .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.