LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

கடந்து உள்ளே செல்

 

ஒரு அன்பர் வந்தார். நான் ஒரு நாத்திகன்(Athiest) கடவுளை நம்புவது இல்லைங்க நானே நேரடியாக விளக்கம் கேட்க வந்தேன் என்றார்.
சரி சொல்கிறேன். நீங்கள் தினம் சாப்பிடுகிறீர்கள் இல்லையா? என கேட்டேன். சாப்பிடாது எப்படி வாழ முடியும் என்றார். சாப்பிட்ட சாப்பாடு என்ன ஆகிறது என்றேன். சீரணம் ஆகிறது என்றார். பொதுப்படையாகச் சொல்லாதீர்கள். நான் சொல்கிறேன். சாப்பாடு உள்ளே போனதும் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் என்ற திரவம் சுரக்கிறது. அது உணவை ஜூஸ் ஆக மாற்றுகிறது. அதிலிருந்து ரசம் பிரிந்து ஒரு பகுதி இரத்தமாக மாறுகிறது; இரத்தம் கெட்டிப்பட்டு ஒரு பகுதி தசையாக மாறுகிறது. தசையிலிருந்து எண்ணெய் வடிகட்டி, ஒரு பகுதி கொழுப்பாக மாறுகிறது. கொழுப்பில் இருந்து கால்சியம் பிரிந்து எலும்பாக மாறுகிறது. எலும்பாக மாறும்பொழுது அதிலிருந்து வரக்கூடிய பொருள் மூளை அதாவது மஜ்ஜை (Marrow) ஆகிறது. அதிலிருந்து வரும் எச...ன்ஸ் (Essence) தான் விந்து நாதமாக (Sexual Vital Fluid) மாறுகிறது. இந்த மாதிரி ஏழு தாதுக்களாக மாறி தினந்தோறும் இந்த உடலில் இருந்து அணுக்கள் கழிந்து கொண்டே இருக்கும். அணுக்களை எல்லாம் சரிப்படுத்தி நம் உடலை இயக்கி வருகிறது. நீங்கள் தினந்தோறும் சாப்பிடுகிற சாப்பாடு என்ன ஆகிறது என்று இப்ப உங்களுக்குத் தெரியுமில்லை; இப்ப இந்த வேலைகளையெல்லாம் யார் செய்கிறார்கள்? நீங்கள் செய்கிறீர்களா? இல்லை வேறு யாராவது செய்கிறார்களா? என்றேன்.
அதற்கு அவர், அது "இயற்கை" என்றார். அந்த இயற்கை என்ற வார்த்தைதான் மாற்றமே தவிர அந்த இயற்கையைத்தான் கடவுள் என்றார்கள். வேறு ஒன்றும் இல்லை என்றேன். நீங்கள் "கடவுள்" என்பதை பெயர்ச் சொல்லாக கூறுகிறீர்கள். அந்த வார்த்தையை முதலில் கொண்டு வந்தவன் அறிவாளி. "கட+ உள்" என்பதை இணைத்துக் "கடவுள்" என்று கொடுத்தார்கள். உள்மனமாக, அதாவது மனதை ஒடுக்கி உள்ளே போனால் நிலையில் எதுவோ அதுதான் முழுமுதற்பொருள்; அது தான் அறிவு, அதுதான் இறைவன் என்று சொல்வதற்காக, "கடவுள் (கட + உள்)" என்று சொன்னார்கள், என்றேன். 'அது தான் கடவுள் என்றால் நான் ஒத்துக்கொள்கிறேன்' என்றார். எனவே குண்டலினியோகத்தின் மூலம் மனதினுடைய இயக்க வேகத்தைக் குறைத்துக் குறைத்து இறுதியில் நிலைத்து நின்று நோக்கி அறிதல் வேண்டும். மனித மனம் என்னவென்று உள் ஒடுங்கி அகத்தவத்தின் (Meditation) மூலம் தெரிந்து கொண்டால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ரகசியங்களும் தெரிந்து போகும்.

ஒரு அன்பர் வந்தார். நான் ஒரு நாத்திகன்(Athiest) கடவுளை நம்புவது இல்லைங்க நானே நேரடியாக விளக்கம் கேட்க வந்தேன் என்றார்.

சரி சொல்கிறேன். நீங்கள் தினம் சாப்பிடுகிறீர்கள் இல்லையா? என கேட்டேன். சாப்பிடாது எப்படி வாழ முடியும் என்றார். சாப்பிட்ட சாப்பாடு என்ன ஆகிறது என்றேன். சீரணம் ஆகிறது என்றார். பொதுப்படையாகச் சொல்லாதீர்கள். நான் சொல்கிறேன். சாப்பாடு உள்ளே போனதும் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் என்ற திரவம் சுரக்கிறது. அது உணவை ஜூஸ் ஆக மாற்றுகிறது. அதிலிருந்து ரசம் பிரிந்து ஒரு பகுதி இரத்தமாக மாறுகிறது; இரத்தம் கெட்டிப்பட்டு ஒரு பகுதி தசையாக மாறுகிறது. தசையிலிருந்து எண்ணெய் வடிகட்டி, ஒரு பகுதி கொழுப்பாக மாறுகிறது. கொழுப்பில் இருந்து கால்சியம் பிரிந்து எலும்பாக மாறுகிறது. எலும்பாக மாறும்பொழுது அதிலிருந்து வரக்கூடிய பொருள் மூளை அதாவது மஜ்ஜை (Marrow) ஆகிறது. அதிலிருந்து வரும் எச...ன்ஸ் (Essence) தான் விந்து நாதமாக (Sexual Vital Fluid) மாறுகிறது. இந்த மாதிரி ஏழு தாதுக்களாக மாறி தினந்தோறும் இந்த உடலில் இருந்து அணுக்கள் கழிந்து கொண்டே இருக்கும். அணுக்களை எல்லாம் சரிப்படுத்தி நம் உடலை இயக்கி வருகிறது. நீங்கள் தினந்தோறும் சாப்பிடுகிற சாப்பாடு என்ன ஆகிறது என்று இப்ப உங்களுக்குத் தெரியுமில்லை; இப்ப இந்த வேலைகளையெல்லாம் யார் செய்கிறார்கள்? நீங்கள் செய்கிறீர்களா? இல்லை வேறு யாராவது செய்கிறார்களா? என்றேன்.

அதற்கு அவர், அது "இயற்கை" என்றார். அந்த இயற்கை என்ற வார்த்தைதான் மாற்றமே தவிர அந்த இயற்கையைத்தான் கடவுள் என்றார்கள். வேறு ஒன்றும் இல்லை என்றேன். நீங்கள் "கடவுள்" என்பதை பெயர்ச் சொல்லாக கூறுகிறீர்கள். அந்த வார்த்தையை முதலில் கொண்டு வந்தவன் அறிவாளி. "கட+ உள்" என்பதை இணைத்துக் "கடவுள்" என்று கொடுத்தார்கள். உள்மனமாக, அதாவது மனதை ஒடுக்கி உள்ளே போனால் நிலையில் எதுவோ அதுதான் முழுமுதற்பொருள்; அது தான் அறிவு, அதுதான் இறைவன் என்று சொல்வதற்காக, "கடவுள் (கட + உள்)" என்று சொன்னார்கள், என்றேன். 'அது தான் கடவுள் என்றால் நான் ஒத்துக்கொள்கிறேன்' என்றார். எனவே குண்டலினியோகத்தின் மூலம் மனதினுடைய இயக்க வேகத்தைக் குறைத்துக் குறைத்து இறுதியில் நிலைத்து நின்று நோக்கி அறிதல் வேண்டும். மனித மனம் என்னவென்று உள் ஒடுங்கி அகத்தவத்தின் (Meditation) மூலம் தெரிந்து கொண்டால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ரகசியங்களும் தெரிந்து போகும்.

 

by Swathi   on 20 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.