இரு இதயங்கள் இதமாய் பேசும்
இரு இமைகளும் இதமாய் உரசும்!
பல கனவுகள் தினம் வந்து திண்ணும்
புது நினைவுகள் ஏதோ பண்ணும்!
சுட்டு விரலுடன் விரல் வந்து கோதும்
இரு விழியுடன் விழிகள் மோதும்!
புது மழை வந்து இதயம் நனைய
பல சுகம் வந்து நெஞ்சம் நிறையும்!
காற்றினில் அவன் வரும் வாசம்
பல கவிதைகள் கொஞ்சிப் பேசும்!
உயிர்ககாதலைச் சொல்லப் போனால்
என் உதட்டினில் வார்த்தைகள் மறையும்!
அவன் சிறிப்பினில் புதுவித நேசம்
அவன் பார்வையில் பலவித பாசம்!
அவன் அருகினில் நெருங்கிடும் போது
என் உணர்வினுள் வேர்விடும் சுவாசம்!
அவன் ஒரு இலக்கியக் காதலன்
என்னைக் கவிதை வரிகளில் நிறைத்தவன்!
அவன் ஓர் அழகிய ஓவியன்
என்னை விழிகளால் வரைபவன்!
உயிருக்குள் உயிர் தந்த இனியவன்
மனதிற்குள் வேர் விட்ட புதியவன்!
என் காதல் செடியினில் மலராய்
என் இதயத்தில் பூத்தக் காதலன்!
இனி இடைவெளி இடமின்றித் துடிக்க
புது உணர்வுகள் உரசித் தவிக்க
பல கவிதையில் அவனை விதைக்க
காதலை சொல்வேன் தன்னை மறக்க!
|