LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1173 - கற்பியல்

Next Kural >

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது - இக்கண்கள் அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கி இன்றும் தாமே இருந்தழுகின்ற இது; நகத்தக்கது உடைத்து - நம்மால் சிரிக்கத்தக்க இயல்பினை உடைத்து. ('கண்கள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இது' என்றது மேற்கூறிய கழிமடச் செய்கையை. அது வருமுன்னர்க் காப்பார்க்கு நகை விளைவிக்கும் ஆகலான் 'நகத்தக்கது உடைத்து' என்றாள்.)
மணக்குடவர் உரை:
இக்கண்கள் அன்று விரைந்து தாமேநோக்கி இன்று தாமே கலுழாநின்ற; இது சிரிக்கத்தக்க துடைத்து. இஃது ஆற்றாமை மிகுதியால் நகுதல் மிக்க தலைமகளை இந்நகுதற்குக் காரண மென்னையென்று வினாவிய தோழிக்கு அவள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது-இக்கண்கள் அன்று எண்ணிப்பாராது தாமே காதலரைத் திடுமென்று நோக்கிவிட்டு, இன்றும் அவரைக் காணவில்லையென்று தாமே யிருந்தழுகின்ற செய்தி ; நகத்தக்கது உடைத்து-சிரிக்கத் தக்க தன்மையை யுடையது. தாம் ஒன்றை விரும்பிச் செய்துவிட்டுத் தாமே அதன் விளைவு பற்றி யழுவதுபகுத்தறிவாளர் நகையாடத் தக்க செய்தியாதலின், 'நகத்தக்க துடைத்து என்றாள். கண்கள் என்பது அதிகாரத்தால் வந்தது. ஏகாரம் பிரிநிலை.
கலைஞர் உரை:
தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன. இது நகைக்கத்தக்க ஒன்றாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.
Translation
The eyes that threw such eager glances round erewhile Are weeping now. Such folly surely claims a smile!.
Explanation
They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?.
Transliteration
Kadhumenath Thaanokkith Thaame Kaluzhum Ithunakath Thakka Thutaiththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >