LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF

தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா?

தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? என்கிறீர்களா... உண்டு என்கிறார் அகத்திய முனிவர். இதற்கு அவர் தரும் விளக்கம் இதோ,  

அம்மாவோ ஆறு சுவைகளையும் ஊட்டி, பிணியற்ற உடலை மட்டுமே தேற்றுவாள். அறுசுவையும் கொண்ட கடுக்காய், நோய் ஓட்டி உடல் தேற்றும். அப்படியானால் நோயைப் போக்கும் கடுக்காய்தானே தாயினும் சிறந்தது என்கிறார் அகத்தியர்.   

நாட்டு மருந்துகளில் ஒரு மிகச்சிறந்த மருந்து கடுக்காய். கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இந்த மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல் தான் வளரும். கடுக்காயின் காலம் சுமார் நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

பிஞ்சு கடுக்காய், கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால்கடுக்காய், காபூல் கடுக்காய், சூரத் கடுக்காய் என கிடைக்கும் இடத்தைப் பொறுத்து கடுக்காயில் பல வகைகள் உண்டு.

கடுக்காயை விஜயன், அரோகினி, பிருதிவி, அமிர்தமரிதகி, த்ருவிருத்தி என அதன் புறத்தோற்றத்தையும் மருத்துவக் குணத்தையும் கொண்டு் வகைப்படுத்தியுள்ளது சித்த ஆயுர்வேத மருந்துவங்கள்.

உச்சி முதல் பாதம் வரை பல நோய்களுக்கு கடுக்காய்ப்பொடி மருந்து. மருந்தாக்குவதற்கு முன்பு கடுக்காயின் கொட்டையை நீக்க வேண்டியது முக்கியம்.

கடுக்காய்க்கு அக நஞ்சு; சுக்குக்கு புற நஞ்சு என்கிறது சித்தர் பாடல். அதாவது சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது முக்கியம். அதேபோல் கடுக்காய்க்கு அதன் கொட்டையை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.

கடுக்காயின் மருத்துவ குணங்கள் :

பிஞ்சு கடுக்காய், மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும்.

கருங்கடுக்காய், மலத்தை இளக்குவதுடன் உடலுக்கு அழகும் மெருகும் தரும்.

செங்கடுக்காய், காச நோயைப் போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும்.

வரிக்கடுக்காய், விந்தணுக்களை உயர்த்தி பலவித நோய்களையும் போக்கும்.

பால் கடுக்காய், வயிற்று மந்தத்தைப் போக்கும்  என கடுக்காய் வகைகளின் பயனை அன்றே சித்தர்கள் சொல்லியுள்ளனர்.

கடுக்காயை கஷாயமாக்கி அருந்தினால், மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்து மலம் இளகும்.

சர்க்கரை நோய் இல்லாமலேயே அதிகமாக சிறுநீர் கழிக்கும் நோய்க்கும், கடுக்காய் துவையல் சிறந்த மருந்து.

துவர்ப்புச் சுவைமிக்க கடுக்காய், மலமிளக்கும். அதே சமயம் ரத்தமாக கழிச்சல் ஆகும் சீதபேதிக்கும் மருந்தாகும்.

கடுக்காயை உப்புடன் சாப்பிட்டால், கப நோய்களும், சர்க்கரையுடன் சாப்பிட்டால் பித்த நோயும், நெய்யுடன் சாப்பிட்டால் வாத நோயும், வெல்லத்துடன் சாப்பிட்டால் அத்தனை நோய்களும் அகலும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என மூன்று மூன்று மாபெரும் மூலிகைகள் சேர்ந்த மருந்துதான் திரிபலா.

திரிபலா மருந்து சர்க்கரை நோய்க்கும் மூலம், பவுத்திரம், குடல் அழற்சி போன்ற நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

ஈறுகளில் ரத்தம் கசிந்தாலோ, வாய்துர்நாற்றம் இருந்தாலோ, பல் சொத்தை இருந்தாலோ, திரிபலா பொடியை பற்பொடியாகப் பயன்படுத்த வேண்டும்.

காலை இஞ்சி கடும்பகல் சுக்கு

மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்

விருத்தனும் பாலனாமே.


காலை வெறும் வயிற்றில் இஞ்சி, நண்பகலில் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர கிழவனும், குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்து.

by Swathi   on 14 Oct 2015  14 Comments
Tags: Haritaki Fruit   Haritaki Fruit Benefits   Haritaki Fruit Health Benefits   Kadukkai Health Benefits   Kadukkai Maruthuva Kurippugal   Kadukkai Maruthuvam   கடுக்காய்  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா?
கருத்துகள்
08-Jan-2021 11:37:02 Guna Sekar said : Report Abuse
ஜாதிக்காய் கடுக்காய் PL COMPARE & REPLY.?
 
09-Mar-2020 03:52:37 jothi said : Report Abuse
வாட் இட் தி பெஸ்ட் மெடிசின் போர் யூரினரி ஸ்ட்ரிச்ரூரே
 
03-Dec-2019 11:24:53 கீதா said : Report Abuse
கர்பமாக இருக்கும் பொழுது கடுக்காய் தூள் சாப்பிடலாமா.
 
03-Dec-2019 11:05:15 Svs ராம் said : Report Abuse
சிறப்பான கருத்துக்களை எளிய முறையில் பரப்புவதற்கு மிகுந்த பாராட்டுக்கள்
 
03-Jul-2018 08:20:54 charles said : Report Abuse
கடுக்காய் தோற்றம் பயன் ஜாதிக்காய் தோற்றம் பயன் கூறுங்கள் .
 
03-Jul-2018 08:14:51 charles said : Report Abuse
ஜாதிக்காய் , கடுக்காய் உடைய பயன்கள் நான் அறிய விரும்புகிறான் தயவு செய்து கூருங்கள்
 
15-Jun-2018 16:05:21 murugappan said : Report Abuse
கடுக்காய், ஜாதிக்காய், இரண்டும் வேறு வேறா?
 
27-Dec-2017 16:48:50 Bhaskar said : Report Abuse
கடுக்காயின் மருத்துவ குணங்கள் வியப்பாக உள்ளது வலம்புரி காயின் மேலும் பயன்கள் பற்றி தெரிவிக்கவும்.
 
21-Feb-2017 05:30:01 Tisi said : Report Abuse
இந்த கடுககாய் ஐந்து சுவை மட்டுமே உள்ளது உப்பு சுவை இல்லை.
 
19-Nov-2016 07:06:31 சசிதரன் g said : Report Abuse
எனக்கு வயிற்றில் இருந்து காற்று வந்து தொண்டையை அடிக்குது ,அப்புறம் சாப்பிட்டு முடித்துவிட்டால் தண்ணி மாதிரி வாய் வழிய வருது என்ன பண்ணலாம் ஒரு நல்ல யோசனை சொல்லுங்க ப்ளீஸ் .
 
15-Nov-2016 04:41:29 சி. அசோக் said : Report Abuse
எனக்கு நிறைய வாயு தொல்லை அதிகமாக இருந்தது கடுக்காய் சிறந்ந மருத்தவ குணம் என்று வலைத்தமிழ். com மூலம் அறிந்தது மிக்க நன்றி.
 
28-May-2016 00:01:58 கலை said : Report Abuse
kadukai எங்க கிடைக்கும்
 
23-Feb-2016 21:03:33 Srinivasan said : Report Abuse
Very useful message for all.i am using and enjoying.pls follow all .Thank u
 
09-Nov-2015 03:33:38 Gopalakrishnan.T said : Report Abuse
its very useful to youngest and oldest people .. I like this page
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.