LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

ககர ஆகார வருக்கம்

 

காரி யெனும்பெயர் சனியுஞ் சாத்தனுங்
கருமையுங் காகமுங் கரிக்கு ருவியும்
வடுகக் கடவுளுந் தெய்வேந் திரனும்
கடுவுமோர் வள்ளலுங் கருதப் பெறுமே. ....459
கால மெனும்பெயர் விடியற் காலமும்
விடிந்த பிற்காலமு முக்கா லமுமாம். ....460
காலெனும் பெயரே காற்றுங் கூற்றுந்
தாளும் பொழுதுந் தறியு மளவையும்
வழியுந் தேரி னுருளும் வாய்க்காலும்
பெலமு மலர்க்காம்பு மிடமும் பிள்ளையும்
முளையு மெனவே மொழிந்தனர் புலவர். ....461
காள மெனும்பெயர் கருமையு நஞ்சும்
ஊது சின்னத்தின் வருக்கமு முரைப்பர். ....462
காரெனும் பெயரே மாரிக் காலமும்
கறுவிய கருமங் கடைமுடி வளவும்
தவிராச் சினமு நீருங் கருங்குரங்கும்
உழவின் பருவமு மேகமுங் கூந்தலுங்
கருமையு மிருளும் வெள்ளாடுங் கருதுவர். ....463
காஞ்சி யெனும்பெயர் காஞ்சி நன்னகரமும்
மேகலைப் பெயருமோர் பண்ணுமோர் மரமுமாம். ...464
காண்டை யெனும்பெயர் கற்பா ழியினொடு
தவத்தோ ரிடமுஞ் சாற்றப் பெறுமே. ....465
காந்தார மெனும்பெய ரிசையுங் காடுமாம். ....466
காமர மெனும்பெய ரிசைப் பொதுப்பெயரும்
அத்த நாளு மோரிசையு மடுப்புமாம். ....467
காளை யெனும்பெயர் பாலைக் கதிபனும்
இளமையோன் பெயரு மெருதும் இயம்புவர். ....468
காய மெனும்பெயர் கறியின் கரிப்பும்
ஆகமும் விசும்பும் பெருங்கா யமுமாம். ....469
காத்திர மெனும்பெயர் களிற்றின் முற்காலும்
ஆக்கையுங் கனமும் கோப முமாமே. ....470
காசெனும் பெயரே மணியின் கோவையும்
குற்றமுங் காசின் விகற்பமும் கூறுவர். ....471
காவி யெனும்பெயர் கள்ளும் குவளையும்
காவிக் கல்லுங் கருதப் பெறுமே. ....472
காழக மெனும்பெயர் கருநிறந் தூசுமாம். ....473
கான மெனும்பெயர் காடு மிசையுமாம். ....474
காகுளி யெனும்பெயர் மந்த விசையொடு
நாசியி னெழுமொலி தவிசு நவிலுவர். ....475
கான லெனும்பெயர் கடற்கரைச் சோலையும்
மலைசார் சோலைப்பெயரு நல்லொளியும்
பேய்த்தேர்ப் பெயரும் பேசப் பெறுமே. ....476
காவெனும் பெயரே காடிமலர்ச் சோலையும்
துலாமுங் காத்தலுந் தோட்சுமைப் பெயருமாம். ....477
காசை யெனும்பெயர் புற்பிடிப் பெயரும்
நாணலும் காசை மரமு நவிலுவர். ....478
காண மெனும்பெயர் பொன்னும் பொற்காசும்
பரியூ ணுஞ்செக்கு மோர்கட் செந்துமாம். ....479
காம்பு எனும்பெயர் மலர்க்காம்பு மூங்கிலும்
பட்டின் விகற்பமும் பகரப் பெறுமே. ....480
காழெனும் பெயரே மணியின் கோவையு
மரத்தின் வயிரமும் விதையும் பரலுமாம். ....481
காழிய ரெனும்பெயர் கடற்கழிப் பரதரும்
ஈரங் கோலியர் பெயரும் இயம்புவர். ....482
கானெனும் பெயரே காடு மணமுமாம். ....483
காப்ப, எனும்பெயர் வெண்ணீருங் காவலும்
தூசுங் கதவும் சொல்லுவர் புலவர். ....484
காத லெனும்பெயர் விருப்பமுங் கோறலும். ....485
காலிலி யெனும்பெய ரருணனும் சனியும்
பாம்பு மெனவே பகரப் பெறுமே. ....486
காண்ட மெனும்பெயர் காடுந் தீர்த்தமுந்
தூசு நூன்முடிவும் படைக்கலப் பொதுவும்
அம்புங் கோலு மணிகலச் செப்பும்
குதிரை யுங்கமண் டலமு மியம்புவர். ....487
காதை யெனும்பெயர் கதையொடு சொல்லுமாம். ....488
காம னெனும்பெயர் கணைவேள் பெயரும்
ஐந்தரு விறைவன் பெயரு மாமே. ....489
காம ரெனும்பெயர் கட்ட ழகுடனே
விருப்பமு மெனவே விளம்புவர் புலவர். ....490
காம மெனும்பெயர் விரகமும் விருப்பும். ....491

 

காரி யெனும்பெயர் சனியுஞ் சாத்தனுங்

கருமையுங் காகமுங் கரிக்கு ருவியும்

வடுகக் கடவுளுந் தெய்வேந் திரனும்

கடுவுமோர் வள்ளலுங் கருதப் பெறுமே. ....459

 

கால மெனும்பெயர் விடியற் காலமும்

விடிந்த பிற்காலமு முக்கா லமுமாம். ....460

 

காலெனும் பெயரே காற்றுங் கூற்றுந்

தாளும் பொழுதுந் தறியு மளவையும்

வழியுந் தேரி னுருளும் வாய்க்காலும்

பெலமு மலர்க்காம்பு மிடமும் பிள்ளையும்

முளையு மெனவே மொழிந்தனர் புலவர். ....461

 

காள மெனும்பெயர் கருமையு நஞ்சும்

ஊது சின்னத்தின் வருக்கமு முரைப்பர். ....462

 

காரெனும் பெயரே மாரிக் காலமும்

கறுவிய கருமங் கடைமுடி வளவும்

தவிராச் சினமு நீருங் கருங்குரங்கும்

உழவின் பருவமு மேகமுங் கூந்தலுங்

கருமையு மிருளும் வெள்ளாடுங் கருதுவர். ....463

 

காஞ்சி யெனும்பெயர் காஞ்சி நன்னகரமும்

மேகலைப் பெயருமோர் பண்ணுமோர் மரமுமாம். ...464

 

காண்டை யெனும்பெயர் கற்பா ழியினொடு

தவத்தோ ரிடமுஞ் சாற்றப் பெறுமே. ....465

 

காந்தார மெனும்பெய ரிசையுங் காடுமாம். ....466

 

காமர மெனும்பெய ரிசைப் பொதுப்பெயரும்

அத்த நாளு மோரிசையு மடுப்புமாம். ....467

 

காளை யெனும்பெயர் பாலைக் கதிபனும்

இளமையோன் பெயரு மெருதும் இயம்புவர். ....468

 

காய மெனும்பெயர் கறியின் கரிப்பும்

ஆகமும் விசும்பும் பெருங்கா யமுமாம். ....469

 

காத்திர மெனும்பெயர் களிற்றின் முற்காலும்

ஆக்கையுங் கனமும் கோப முமாமே. ....470

 

காசெனும் பெயரே மணியின் கோவையும்

குற்றமுங் காசின் விகற்பமும் கூறுவர். ....471

 

காவி யெனும்பெயர் கள்ளும் குவளையும்

காவிக் கல்லுங் கருதப் பெறுமே. ....472

 

காழக மெனும்பெயர் கருநிறந் தூசுமாம். ....473

 

கான மெனும்பெயர் காடு மிசையுமாம். ....474

 

காகுளி யெனும்பெயர் மந்த விசையொடு

நாசியி னெழுமொலி தவிசு நவிலுவர். ....475

 

கான லெனும்பெயர் கடற்கரைச் சோலையும்

மலைசார் சோலைப்பெயரு நல்லொளியும்

பேய்த்தேர்ப் பெயரும் பேசப் பெறுமே. ....476

 

காவெனும் பெயரே காடிமலர்ச் சோலையும்

துலாமுங் காத்தலுந் தோட்சுமைப் பெயருமாம். ....477

 

காசை யெனும்பெயர் புற்பிடிப் பெயரும்

நாணலும் காசை மரமு நவிலுவர். ....478

 

காண மெனும்பெயர் பொன்னும் பொற்காசும்

பரியூ ணுஞ்செக்கு மோர்கட் செந்துமாம். ....479

 

காம்பு எனும்பெயர் மலர்க்காம்பு மூங்கிலும்

பட்டின் விகற்பமும் பகரப் பெறுமே. ....480

 

காழெனும் பெயரே மணியின் கோவையு

மரத்தின் வயிரமும் விதையும் பரலுமாம். ....481

 

காழிய ரெனும்பெயர் கடற்கழிப் பரதரும்

ஈரங் கோலியர் பெயரும் இயம்புவர். ....482

 

கானெனும் பெயரே காடு மணமுமாம். ....483

 

காப்ப, எனும்பெயர் வெண்ணீருங் காவலும்

தூசுங் கதவும் சொல்லுவர் புலவர். ....484

 

காத லெனும்பெயர் விருப்பமுங் கோறலும். ....485

 

காலிலி யெனும்பெய ரருணனும் சனியும்

பாம்பு மெனவே பகரப் பெறுமே. ....486

 

காண்ட மெனும்பெயர் காடுந் தீர்த்தமுந்

தூசு நூன்முடிவும் படைக்கலப் பொதுவும்

அம்புங் கோலு மணிகலச் செப்பும்

குதிரை யுங்கமண் டலமு மியம்புவர். ....487

 

காதை யெனும்பெயர் கதையொடு சொல்லுமாம். ....488

 

காம னெனும்பெயர் கணைவேள் பெயரும்

ஐந்தரு விறைவன் பெயரு மாமே. ....489

 

காம ரெனும்பெயர் கட்ட ழகுடனே

விருப்பமு மெனவே விளம்புவர் புலவர். ....490

 

காம மெனும்பெயர் விரகமும் விருப்பும். ....491

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.